News March 24, 2024

குழந்தைக்கு ரயிலின் பெயரை சூட்டிய பெற்றோர்

image

மத்தியபிரதேசம் போபால் அருகே காமயானி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியில் துடித்த அவருக்கு ஓடும் ரயிலுக்குள்ளேயே அங்கிருந்த பெண்கள் பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. சம்பவமறிந்த ரயில்வே போலீசார் தாய்-சேய் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த குழந்தைக்கு ‘காமயானி’ என பெயர் சூட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News April 28, 2025

IPL-இல் இனி 94 போட்டிகள்

image

2028 IPL தொடரில் இருந்து 94 லீக் போட்டிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக அதன் தலைவர் அருன் துமல் தெரிவித்துள்ளார். 8 IPL அணிகள் மட்டுமே இருந்தபோது, ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் 2 லீக் போட்டிகளில் விளையாடின. ஆனால், 10 அணிகள் வந்தபின், இந்த முறை பின்பற்றப்படாமல் 70 போட்டிகள் மட்டுமே நடத்தப்படுகிறது. இது நியாயமான நடைமுறை அல்ல என்று புகார் எழுந்ததால் மறு பரிசீலனை செய்யப்படவுள்ளது.

News April 28, 2025

முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

image

பிரபல தொழிலதிபர் வேலுவின் தாயார் கோமதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த செய்தியை கேட்ட உடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலுவின் இல்லத்திற்கு நேரில் சென்று கோமதியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின், சோகத்தில் மூழ்கியிருந்த குடும்பத்தினரை ஒவ்வொருவருக்கும் தனது ஆறுதலை தெரிவித்தார்.

News April 28, 2025

நேற்று வரை இலை இன்று களையா? சீறும் காளியம்மாள்!

image

நேற்று வரை இலையாக இருந்தவர்கள் இன்று களையாகத் தெரிகிறார்களா என சீமானிடம் காளியம்மாள் சீறியுள்ளார். நாதகவில் இருந்து விலகிய பிறகு முதல் முறையாகத் தனியார் நாளிதழுக்கு நேர்காணல் அளித்துள்ள அவர், பணம், பதவி, அந்தஸ்துக்காக நாதகவில் யாரும் சேரவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், களையென நினைத்து விளைந்த நல்ல பயிர்களைப் பிடுங்கிப் போட்டு விடக்கூடாது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

error: Content is protected !!