News June 21, 2024

விஷச்சாராயம் அருந்திய ஒரு வட மாநிலத்தவர் பலி

image

விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த 50 பேரில், பெரும்பாலானோர் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் ஒருவர் உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்தர் என்பது தெரியவந்துள்ளது. அவர் அப்பகுதியில் தங்கி பானி பூரி வியாபாரம் செய்துவந்த நிலையில், அவரும் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளார். விசாரணைக்குப் பின் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

Similar News

News September 16, 2025

மீனவர்கள் மீது திமுகவுக்கு அக்கறையில்லை: நயினார்

image

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தொடர்ச்சியாக பாஜக விமர்சித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் கட்டித்தரப்படும் என சொன்னீங்களே, செஞ்சீங்களா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். பல கோடி செலவில் பேனா சிலை அமைக்க ஆர்வம் காட்டும் திமுக, 4 ஆண்டுகளாக மீனவர்களுக்கென ஒரு வீடு கூட கட்டித்தரவில்லை என விமர்சித்துள்ளார்.

News September 16, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 16, ஆவணி 31 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 AM – 4:30 AM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: தசமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.

News September 16, 2025

பணியிட அவமானத்தால் தற்கொலை: ₹90 கோடி இழப்பீடு

image

பணியிடத்தில் அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்த பெண்ணின் குடும்பத்தாருக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனம் ₹90 கோடி இழப்பீடு வழங்க ஜப்பான் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ல் சடோமி (25) என்ற பெண்ணை, நிறுவன தலைவர் தெரு நாய் என கூறி அவமானப்படுத்தியதால் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அது தோல்வியில் முடிய, கோமாவில் இருந்த அவர் 2023-ல் உயிரிழந்தார். இதையடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தார் கோர்ட்டை அணுகினர்.

error: Content is protected !!