News December 4, 2024
கோடநாடு வழக்கில் புதிய உத்தரவு!

கோடநாடு கொலை சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்தி பேசிய பத்திரிகையாளர் மேத்யூவுக்கு எதிராக ₹ 1 கோடி மானநஷ்ட வழக்கை இபிஎஸ் தொடர்ந்திருந்தார். இதையடுத்து, மேத்யூ தாக்கல் செய்த பதில் மனுவிலும் இபிஎஸ்-க்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இதற்கு இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேத்யூ தனது பதில் மனுவில் கூறிய கருத்துகளை திரும்ப பெறுவாரா என ஐகோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
விஜய் உடன் கூட்டணியா? முக்கிய ஆலோசனை

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜய்யின் பேச்சுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆரம்பம் முதலே ஆதரவு தெரிவித்து வருகிறார். NDA-வில் இருந்து அவர் விலகிய பின்னர், விஜய் உடன் கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, TVK கூட்டணி தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினாராம். மேலும், ஜன.7-ல் மதுரை மாநாட்டிற்கு முன்னதாக கூட்டணியை இறுதி செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
News October 18, 2025
BJP வாஷிங் மெஷின் வெளுப்பது எப்படி? CM ஸ்டாலின்

ஊழல்வாதிகள் BJP கூட்டணிக்கு வந்தபிறகு வாஷிங் மெஷினில் வெளுப்பது எப்படி என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், கவர்னர்களை வைத்து குழப்பம் விளைவிப்பது ஏன் உள்ளிட்ட கேள்விகளை தனது X பக்கத்தில் எழுப்பியுள்ளார். இதற்கெல்லாம் பதில் வருமா? அல்லது வழக்கம்போல் வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டியில் பொய் பிரசாரம் தொடருமா எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
News October 18, 2025
நக்சல் இல்லாத நாடாக இந்தியா மாறும்: PM

இந்தியாவில் கடந்த 3 நாள்களில் மட்டும் 303 நக்சலைட்கள் சரணடைந்துள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நக்சல் பயங்கரவாதத்தில் மகன்களை இழந்த தாய்மார்களின் வலி தனக்கு தெரியும் என்று கூறினார். அந்த தாய்மார்களின் ஆசிகளுடன், இந்தியா விரைவில் நக்சல் பயங்கரவாதத்திலிருந்து முழுமையாக விடுபடும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக PM குறிப்பிட்டார்.