News December 4, 2024
கோடநாடு வழக்கில் புதிய உத்தரவு!

கோடநாடு கொலை சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்தி பேசிய பத்திரிகையாளர் மேத்யூவுக்கு எதிராக ₹ 1 கோடி மானநஷ்ட வழக்கை இபிஎஸ் தொடர்ந்திருந்தார். இதையடுத்து, மேத்யூ தாக்கல் செய்த பதில் மனுவிலும் இபிஎஸ்-க்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இதற்கு இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேத்யூ தனது பதில் மனுவில் கூறிய கருத்துகளை திரும்ப பெறுவாரா என ஐகோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.
Similar News
News April 29, 2025
PAK-கிற்கு வந்த துருக்கி ஆயுதங்கள்?

இந்தியா – பாக். இடையிலான பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பாக். மக்களுக்கு வலுவான ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். துருக்கியின் ராணுவ சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள், பாக்.-ல் தரையிறங்கியதாக தகவல் வெளியான நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இருப்பினும், எவ்வித ஆயுதங்களையும் அனுப்பவில்லை என துருக்கி மறுத்துள்ளது.
News April 29, 2025
பஜாஜின் புது EV ஸ்கூட்டர்.. என்னென்ன அம்சங்கள்?

புதிய சேட்டாக் 3503 EV ஸ்கூட்டர் வேரியன்டை பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மற்ற 35 சீரிஸின் விலையைக் காட்டிலும் சற்று குறைவாக, ₹1.10 லட்சத்திற்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல், குறைவான வசதிகளையே கொண்டுள்ளது. மணிக்கு 63 கி.மீ அதிகபட்ச வேகத்தில் செல்லும். மற்ற 3501, 3502 வேரியன்ட்களை காட்டிலும், 0 – 80% வரை சார்ஜ் ஏற 3.25 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
News April 29, 2025
இன்னும் நிறைய இருக்கு சாம்பியன்: யூசுஃப் பதான்

IPL-ல் அதிவேக சதமடித்த இந்திய வீரர் என்ற தன்னுடைய சாதனையை முறியடித்த சூர்யவன்ஷியை, யூசுஃப் பதான் பாராட்டியுள்ளார். இளம் வீரர்களுக்கும் RR-க்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் உள்ளதாகவும், சாம்பியன் சூர்யவன்ஷி இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருப்பதாகவும் அவர் புகழ்ந்துள்ளார். 2010-ல் RR-க்காக விளையாடிய யூசுஃப் 37 பந்துகளில் சதமடித்த நிலையில், வைபவ் தற்போது 35 பந்துகளில் சதமடித்துள்ளார்.