News December 4, 2024

கோடநாடு வழக்கில் புதிய உத்தரவு!

image

கோடநாடு கொலை சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்தி பேசிய பத்திரிகையாளர் மேத்யூவுக்கு எதிராக ₹ 1 கோடி மானநஷ்ட வழக்கை இபிஎஸ் தொடர்ந்திருந்தார். இதையடுத்து, மேத்யூ தாக்கல் செய்த பதில் மனுவிலும் இபிஎஸ்-க்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இதற்கு இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேத்யூ தனது பதில் மனுவில் கூறிய கருத்துகளை திரும்ப பெறுவாரா என ஐகோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.

Similar News

News November 21, 2025

குமரி: 16 பவுன் நகை கொள்ளை.. கைரேகைகள் சிக்கின

image

குமரி மாவட்டம் பளுகல் அருகே தட்டிக்குழியை சேர்ந்தவர் கொத்தனார் ரவீந்திரன் (56). வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கதவை உடைத்து பீரோவில் இருந்த 16 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் திருடி சென்றுள்ளது. இதுகுறித்து நேற்று பளுகல் போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணையை துவங்கினர். இதில் 2 வெவ்வேறான கைரேகைகள் கிடைத்துள்ளது. இதனை வைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

News November 21, 2025

இதற்காகவே SIR-ஐ ஆதரிக்கிறோம்: EPS

image

வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே SIR-ஐ ஆதரிப்பதாக EPS தெரிவித்தார். இப்பணி முழுமையாக நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக திமுக அதிகாரிகளுக்கு அழுத்தம் தருவதாக விமர்சித்தார். வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கு கூட திமுக முன் வரவில்லை என்றால், நாடு எப்படி முன்னேறும் என்றும் EPS கேள்வி எழுப்பினார். SIR-க்கு அதிமுக ஆதரவு தெரிவிப்பதை திமுக விமர்சித்து வருகிறது.

News November 21, 2025

‘SORRY அம்மா.. என் சாவுக்கு டீச்சர் தான் காரணம்’

image

ம.பி.,யில் 11-ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சோக முடிவை எடுப்பதற்கு முன் மாணவி உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், பள்ளியில் தனது டீச்சர் சித்ரவதை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விரல்களுக்கு இடையே பேனாவை வைத்து அழுத்தி பனிஷ்மெண்ட் என கொடுமைப்படுத்தியதாக மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

error: Content is protected !!