News December 5, 2024
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் (டிச.7) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, 12ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் தமிழ்நாடு – இலங்கை கடலோர பகுதிகளை அடையக் கூடும் எனவும் கணித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.
Similar News
News April 29, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
News April 29, 2025
நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக நாளை மத்திய அமைச்சரவை கூடுகிறது. பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடியது. அப்போது, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்பட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு PM மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News April 29, 2025
பங்குச்சந்தைகளில் மாற்றம் இல்லை

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற, இறக்கங்களை கண்டு இறுதியில் பெரிய மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தது. காலையில், வர்த்தகம் தொடங்கியவுடன், 120 புள்ளிகள் உயர்ந்த நிஃப்டி, மதியம் 12 மணியளவில் சரிவைக் கண்டது. சில நேரங்களில் நேற்றைய புள்ளிகளுக்கு கீழ் சென்ற நிஃப்டி, வர்த்தக நேர முடிவில் 7 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 24,335 புள்ளிகளில் இருந்தது. சென்செக்ஸ் இன்று 70 புள்ளிகள் உயர்ந்தது.