News April 21, 2025
மூடநம்பிக்கைக்கு எதிராக புதிய சட்டமா?

மூடநம்பிக்கையை ஒழிக்க அரசு சிறப்பு சட்டம் கொண்டு வருமா என்று சட்டப்பேரவையில் திமுக MLA டாக்டர் எழிலன் கேள்வி எழுப்பினார். அதற்கு, சட்டத்தின் மூலமாக எதையும் கொண்டுவந்து ஒன்றை தடுப்பதோ, பாதுகாப்பதோ இயலாத காரியம். நம்முடைய கொள்கைகளை நாம் பின்பற்றலாம், அதில் தவறில்லை. ஆனால், மற்றவர்களை கட்டாயப்படுத்துவது ஏற்றுக்கொள்வதாக இருக்குமா என்பதை பார்த்துதான் சொல்ல வேண்டும் என அமைச்சர் ரகுபதி பதிலளித்தார்.
Similar News
News August 20, 2025
ஒழுக்கம் பற்றி எனக்கு சொல்கிறீர்களா? அமித்ஷா

2010-ல் அமித்ஷா குஜராத் அமைச்சராக இருந்த போது, சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டார், அப்போது அவர் ஒழுக்கத்தை நிலைநாட்டினாரா என லோக்சபாவில் காங்., MP வேணுகோபால் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமித்ஷா, உடனே ராஜினாமா செய்துவிட்டு, போலி வழக்கில் விடுதலையாகும் வரை எந்த பதவியையும் ஏற்கவில்லை, எனக்கு யாரும் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டாம் எனக் காட்டாமாக தெரிவித்தார்.
News August 20, 2025
கடத்தல் தங்கம்: மத்திய அரசு வெளியிட்ட ஷாக் கணக்கு

2023-24-ல் 6,599 கடத்தல் வழக்குகளில் 4,972 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பார்லிமென்ட்டில் கூறியுள்ளார். இது, 2022 – 23-ல் 4,343 கிலோ, 2021 – 2022 நிதியாண்டில் 2,172 கிலோவாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசின் இந்தத் தகவல் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சட்டவிரோதமான கடத்தல் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. இதனை தடுக்க என்ன வழி?
News August 20, 2025
அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி

இண்டர்மீடியட் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை ‘அக்னி-5’ சோதனை வெற்றி அடைந்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒடிஷாவின் சந்திப்பூர் சோதனைக் களத்தில் இச்சோதனை நடந்தது. செயல்பாட்டு, தொழில்நுட்ப ரீதியாக அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இச்சோதனை இருந்தது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய ஏவுகணை இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் கூட்டும் என பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.