News October 19, 2024
புது சர்ச்சையில் சிக்கியுள்ள தவெக மாநாடு

TVK விக்கிரவாண்டி மாநாட்டுக்காக, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி பனங்கன்றுகள் வெட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாநாடு நடக்கும் திடலுக்கு அருகில் இருந்த 8 பனங்கன்றுகள் வெட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் தற்போது புகைப்படத்துடன் வெளிவந்துள்ளதால், தவெக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில், அரசு அனுமதியின்றி பனை மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது.
Similar News
News July 5, 2025
BREAKING: இபிஎஸ்-க்கு Z+ பாதுகாப்பு

இபிஎஸ்-க்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் துப்பாக்கி ஏந்திய 10 NSG கமாண்டோக்கள், 55 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அண்மையில் இபிஎஸ்-க்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் இரு முறை கொலை மிரட்டல் விடுத்தது கவனிக்கத்தக்கது.
News July 5, 2025
வாட்டர் பெல்: பெற்றோர் முக்கிய வேண்டுகோள்

‘வாட்டர் பெல்’ எனும் திட்டம் தமிழக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பல மாணவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் நீர் பருகுவதால், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஸ்டீல் (அ) செம்பு பாட்டில்களைக் கொண்டுவர அரசு பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரம், தமிழை வளர்க்கும் தமிழக அரசு ‘தண்ணீர் மணி’ என்று திட்டத்தின் பெயரை மாற்ற பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
News July 5, 2025
மதுரை எய்ம்ஸில் ஒரு கட்டடம் ஜனவரியில் செயலாக்கம்

2026 ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் ஒரு கட்டடம் செயல்பாட்டுக்கு வரும் என்று எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற ஜனவரிக்குள் லேப், ஹாஸ்டல் & 150 நோயாளி படுக்கைகள் கட்டமைக்கப்படும் என்றார். 2027-க்குள் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தற்போது ராமநாதபுரத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.