News March 18, 2024
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக புதிய வழக்கு

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் அதிக அளவிலான பணத்தை நன்கொடையாகப் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2019 முதல் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் வரையிலான விவரங்களையும் வெளியிட வேண்டும் என ‘சிட்டிசன்ஸ் ரைட்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
Similar News
News September 7, 2025
வில்வித்தையில் தங்கத்தை தட்டி தூக்கிய இந்தியா

கொரியாவில் நடந்த உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் காம்பவுண்ட் பிரிவில்,
இந்தியா முதல்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் அடங்கிய இந்திய ஆண்கள் அணி, இன்றைய ஃபைனலில் ஃபிரெஞ்சு ஜோடியை 235- 233 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இந்திய பெண்கள் அணி பதக்கத்தை தவறவிட்டாலும், ஆண்கள் அணி சாதித்துள்ளது.
News September 7, 2025
BREAKING: விஜய்யுடன் தேமுதிக கூட்டணி?

தவெக உடன் தேமுதிக கூட்டணி அமைப்பது தொடர்பாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜனவரி 9-ல் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் தெரிவிக்க உள்ளதாக விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் – விஜய் இடையே நல்ல நட்புறவு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், தவெகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
News September 7, 2025
ஸ்பெயின் வீரரை எளிதாக காலி செய்த குகேஷ்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் FIDE Grand Swiss செஸ் தொடரின் 3-ம் சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் வெற்றி பெற்றார். கருப்பு நிறக்காயுடன் களமிறங்கிய குகேஷ், ஸ்பெயின் டேனில் யுஃபாவை எளிதாக வீழ்த்தினார். .மறுபுறம் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி, ஆஸ்திரிய வீராங்கனை ஆல்கா படெல்காவை 3-வது சுற்றில் வீழ்த்தி முன்னிலைப் பெற்றார்.