News March 18, 2024
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக புதிய வழக்கு

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் அதிக அளவிலான பணத்தை நன்கொடையாகப் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2019 முதல் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் வரையிலான விவரங்களையும் வெளியிட வேண்டும் என ‘சிட்டிசன்ஸ் ரைட்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
Similar News
News December 7, 2025
நாமக்கல்: கொடி நாள் நிதி வழங்கிய ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று டிசம்பர்-7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கொடி நாள் நிதி வழங்கி, இதனை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News December 7, 2025
கரண்ட் பில்லை அதிகரிக்குமா பிரிட்ஜ் Magnet பொம்மைகள்?

பல டிசைன்களில், பல கலர்களில் பிரிட்ஜ்களில் Magnet பொம்மைகளை ஒட்டிவைப்பது பலரது வீட்டில் உள்ள பழக்கமாகும். ஆனால், இதனால் கரண்ட் பில் அதிகரிக்குமோ என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. உண்மையில் இந்த Magnet பொம்மைகளால் கரண்ட் பில் ஏறாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த Magnet-களில் காந்தப்புலம் மிகவும் பலவீனமாக இருக்கும் என்பதால், இது பிரிட்ஜின் குளிரூட்டும் அமைப்பையோ, மோட்டாரையோ பாதிக்காது. SHARE IT.
News December 7, 2025
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை போக்கு அதிகரிப்பு: EPS

குமரி, தென்காசி, நாகர்கோவில், சேலம், மயிலாடுதுறை பகுதிகளில் நேற்று நடைபெற்ற கொலை, வழிப்பறி சம்பவங்கள், தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு போய் உள்ளதை காட்டுவதாக EPS விமர்சித்துள்ளார். ஆனால், CM ஸ்டாலின் சுய விளம்பரத்தில் திளைப்பதாகவும் சாடியுள்ளார். எனவே, ஆட்சியில் இருக்கவுள்ள 4 மாதங்களிலாவது சட்ட ஒழுங்கின் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் EPS வலியுறுத்தியுள்ளார்.


