News March 18, 2024
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக புதிய வழக்கு

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் அதிக அளவிலான பணத்தை நன்கொடையாகப் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2019 முதல் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் வரையிலான விவரங்களையும் வெளியிட வேண்டும் என ‘சிட்டிசன்ஸ் ரைட்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
Similar News
News December 9, 2025
BREAKING: விஜய்க்கு சீமான் ஆதரவு

விஜய்யை அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்துவரும் சீமான், தற்போது விஜய்யை தம்பி எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார். புதுச்சேரிக்கு மாநில உரிமை கோரிய விஜய்யின் கருத்துக்கு ஆதரவாக சீமான் பேசியுள்ளார். மாஹே, ஏனாம் வேண்டாம், மாநில உரிமை வேண்டும் என முதலில் நான்தான் புதுச்சேரிக்காக பேசினேன் என்றும், எனது கோரிக்கை வலுபெறகிற மாதிரி தம்பி விஜய்யும் பேசியிருப்பது மகிழ்ச்சி எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
News December 9, 2025
புதுச்சேரி முதல்வருக்கு விஜய் பாராட்டு

புதுச்சேரியில் இன்று பொதுகூட்டம் நடத்திய விஜய், அதற்கு பாதுகாப்பு அளித்த மாநில அரசையும், CM ரங்கசாமியையும் மீண்டும் பாராட்டியுள்ளார். மேலும் எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினர், கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள் எனவும் X பதிவில் குறிப்பிட்டுள்ளார். நம் அரசியல் பயணத்தை முடக்க திமுக போடும் திட்டம் அணுவளவும் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
#KovaiBiggestLandSCAM.. பின்னணி என்ன?

கோவையில் ₹3,500 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்ததாக சிங்காநல்லூர் அதிமுக MLA ஜெயராம் மீது புகார் எழுந்துள்ளது. ஜி-ஸ்கொயர் நிறுவனம் தனது இந்த புகாரை செய்தித்தாளில் பொது அறிவிப்பாகவும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், திமுக ஆதரவாளர்கள் பலரும் #Kovaibiggestlandscam என்ற ஹேஷ்டேக்கை X தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று அமைச்சர் <<18501393>>நேரு மீதான ED-ன்<<>> ஊழல் புகாரை அதிமுகவினர் விமர்சித்து வந்தனர்.


