News March 23, 2025
கஞ்சா கேட்டு அடம்பிடிக்கும் கொலைகார மனைவி!

உ.பி.யில் காதலனோடு சேர்ந்து கணவனை கொடூரமாக <<15822875>>கொலை செய்த<<>> மனைவி முஸ்கான், தற்போது சிறை அதிகாரிகளையே அலற வைத்து வருகிறார். சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதலாக, உணவை தவிர்த்து வரும் அவர், தனக்கு கஞ்சா அல்லது ஹெராயினை கொண்டு வருமாறு அடம்பிடித்து வருகிறார். அதே சமயத்தில், காதலன் சாஹில் சிறையில் அமைதியாக இருப்பதுடன், அவ்வப்போது போதைப்பொருள் தருமாறு போலீசாரிடம் கெஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News March 25, 2025
+2 தேர்வுகள் முடிந்தது. விட்டாச்சு லீவு!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய ப்ளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று மதியத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் இருந்து மாணவ – மாணவிகள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வெளியேறினர். இதனையடுத்து, இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. இனி, படிப்படியாக அனைத்து வகுப்பினருக்கும் விடுமுறை தொடங்கும்.
News March 25, 2025
₹2,300 கோடி மதிப்பிலான 55 பொருள்களுக்கு வரி குறைப்பு?

₹2,300 கோடி மதிப்பிலான 55 USA இறக்குமதி பொருள்களுக்கான வரியை குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் அறிவிப்பின்படி, ஏப்ரல் 2 முதல் அமலுக்கு வரும் புதிய USA வரி விதிப்பு முறையால், ₹6,600 கோடி அளவுக்கு இந்திய இறக்குமதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இரு நாட்டு வர்த்தகத்தை சுமூகமாக பேண, இந்த வரி குறைப்பை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
News March 25, 2025
காதலிக்க ரெடி: பாண்டியாவின் முன்னாள் மனைவி

வாழ்க்கை மீண்டும் ஒரு காதல், ரிலேஷன்ஷிப் வாய்ப்பைக் கொடுத்தால், அதை ஏற்க தயாராக இருப்பதாக நடாஷா ஸ்டான்கோவிக் தெரிவித்துள்ளார். சரியான நேரம் வரும் போதுதான் இருவருக்குள்ளான உறவு மலரும் எனவும், வாழ்க்கை கொண்டு வருபவற்றை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். செர்பியன் மாடலான நடாஷா, ஹர்திக் பாண்டியாவை கடந்த 2020ல் திருமணம் செய்த நிலையில், 2024ல் இருவரும் பிரிந்தனர்.