News March 16, 2025
தினம் ஒரு பொன்மொழி!

▶கையாலாகாதவனுக்கு கடவுள் துணை; அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; தவறை உணரமுடியாத உனக்கு தலைவிதி. ▶பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும். ▶முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது; அறிவு தீப்பிடிக்க சற்று தாமதமாகும். ▶விதி என்பது ஒடுக்கப்பட்டவர்கள் கொதித்து எழாதிருக்க செய்யப்பட்ட சதியாகும் – தந்தை பெரியார்.
Similar News
News March 16, 2025
தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த முன்னணி நடிகை

தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்த சமந்தா தற்போது ஹிந்தி வெப் சீரிஸிலும் அசத்தி வருகிறார். இதனிடையே ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கிய சமந்தா, ‘சுபம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். பிரவீன் காந்த்ரேகுலா இயக்கும் இப்படத்தில் பல புது முகங்கள் நடித்துள்ளனர். படம் மீது மிகுந்த நம்பிக்கையில் உள்ள சமந்தா விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.
News March 16, 2025
மகளிர் உரிமைத் தொகை.. யார் யார் விண்ணப்பிக்கலாம்

மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், யார் எல்லாம் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. * புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள், * கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள், *தவறான காரணங்களால் பெயர் விடுபட்டவர்கள், *அரசு அல்லாத சில கூட்டுறவு ஊழியர்களின் மனைவிகள் உள்ளிட்டோர் ₹1000 பெற விண்ணப்பிக்கலாம்.
News March 16, 2025
பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: மெக்வால்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை அறிமுகப்படுத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் மெக்வால் கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது, அதை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 1952, 1957, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற, சட்டசபைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.