News August 14, 2024
சென்னைக்கு விமானத்தில் வந்த குரங்கு

குரங்கு, ஆமை, பாம்புகள் ஆகிய விலங்குகளை விமானத்தில் கொண்டுவந்த நபரை, போலீசார் கைது செய்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த நபர் மீது சந்தேகம் இருந்ததால், அவரது உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர், 22 அரிய வகை விலங்குகளை சட்டவிரோதமாக சென்னைக்கு கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஏன் இந்த விலங்குகளை இங்கு எடுத்துவந்தார் என விசாரணை நடக்கிறது.
Similar News
News November 1, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு!

மாதத்தின் முதல் நாளான இன்று(நவ.1) தங்கம் உயர்வுடன் தனது வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 22 கேரட் தங்கம், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹11,310-க்கும், சவரன் ₹90,480-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹166-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,66,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலையில் நேற்று மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது: EPS

கட்சியில் இருந்த துரோகிகள் போய்விட்டனர்; தற்போதுதான் நிம்மதி ஏற்பட்டுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் நெருஞ்சில் முள்ளாக இருந்த சிலரை எப்படி அகற்றுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால், அவர்களாகவே தவறு செய்துவிட்டு, தங்களை துரோகிகள் பக்கம் இணைத்து கொண்டு வெளியேறி விட்டனர். இனி அவர்கள் அனைவரும் நம்முடைய எதிரிகள்தான் என்று செங்கோட்டையனை மறைமுகமாக குறிப்பிட்டார்.
News November 1, 2025
நாடு முழுவதும் ஆதார் கட்டணம் உயர்ந்தது

நாடு முழுவதும் இன்று முதல் ஆதார் கட்டணம் உயர்கிறது. *பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை புதுப்பிக்க இனி ₹75 வசூலிக்கப்படும் (முன்பு ₹50) *கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க ₹125 கட்டணம் (முன்பு ₹100), *வீட்டிலிருந்தே ஆதார் சேவைகளை பெற, முதல் நபருக்கு ₹700 & அதே முகவரியில் உள்ள ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் ₹350 கட்டணம் வசூலிக்கப்படும்.


