News April 1, 2024
பூத் சிலிப் வழங்கும் பணிகள் தொடக்கம்

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை அரசு அலுவலர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்கள் பூத் சிலிப் விநியோகிக்க உள்ளனர். தொடர்ந்து, இப்பணிகள் ஏப்.13ஆம் தேதி நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Similar News
News February 12, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 607▶குறள்: இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். ▶பொருள்: முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.
News February 12, 2026
அதிமுகவுக்கு விஜய் ஒரு பொருட்டே அல்ல: EPS

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ‘ஆட்சியில் பங்கு’ குறித்த கேள்விக்கு, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று EPS பதிலளித்துள்ளார். விஜய் தொடர்பான கேள்விக்கு, சினிமாவில்தான் ஹீரோ, ஆனால் அரசியலில் கேள்விக்குறிதான். அதிமுகவுக்கு தவெக தலைவர் விஜய் ஒரு பொருட்டே அல்ல எனக் கூறிய அவர், எம்ஜிஆர் பெயரை சொல்லித்தான் அவர் (விஜய்) கட்சியே நடத்துகிறார் எனவும் விமர்சித்தார்.
News February 12, 2026
ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? அருண்ராஜ்

ஆட்சியில் பங்கு தரமாட்டோம் <<19108663>>முதல்வரால்<<>>, திமுக தனித்து போட்டியிடும் என்று சொல்ல முடியுமா என்று தவெகவின் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். CM ஸ்டாலின் இன்று அமர்ந்திருக்கும் நாற்காலியில் ஒரு கால்தான் திமுகவுடையது, மீதி 3 கால்கள் கூட்டணி கட்சிகளுடையது. கூட்டணி கட்சிகளை வெறும் ஒட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி அதிகாரப் பகிர்வு அளிக்காமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரான செயல் எனவும் விமர்சித்தார்.


