News June 4, 2024

மக்கள் காதுகளில் ஒலிக்காத மைக்

image

2024 தேர்தலில் சீமானின் நாதக தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் கிடைத்தது. இத்தேர்தலில் ஒரு இடத்திலும் வெற்றி கிடைக்கவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாதக 3வது பெரிய கட்சியாக வாக்குகளை அறுவடை செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 22, 2025

ஆசிய கோப்பையில் மீண்டும் IND vs PAK?

image

ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 3-வது முறையாக மோத மீண்டும் வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால், இந்திய அணி இறுதி போட்டியை எட்டி விடும். அதே போல, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டாலும், இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. இதனால், மீண்டும் ஒருமுறை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்பு ஏற்படும்.

News September 22, 2025

கல்வித் தரத்தை அவமதிக்கும் ஆர்.என்.ரவி: வேல்முருகன்

image

தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை இழிவுபடுத்தும் வகையில், கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து கூறுவதாக தவாக தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் என்றாலே கல்வி, அறிவு, திறமை என்பது நாடு முழுவதும் பெருமையாகப் பேசப்படும் ஒன்று. அந்தக் கல்வித் தரத்தை குறைத்து மதிப்பிட்டு, “TN-ல் தரமான கல்வி இல்லை” என கவர்னர் பேசியிருக்கிறார். இதை உடனே அவர் திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News September 22, 2025

காலையில் இந்த மூலிகை தேநீர் போதும்.. அவ்வளோ நல்லது!

image

விலை இலை தேநீர் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, குடலை தூய்மைப்படுத்த உதவும். *புதிய வில்வ இலைகளை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும் *இவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவும் *காலையில், இந்த இலைகள் இருக்கும் தண்ணீரை சூடுபடுத்தி, கொதிக்க விடவும் *பிறகு வடிகட்டி, தேன் அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!