News April 3, 2025
மூக்கையாவுக்கு மணிமண்டபம்; கார்ல் மார்க்ஸூக்கு சிலை

உசிலம்பட்டியில் வி.கே.மூக்கையா தேவருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்தார். பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றிய அவர், நியாயத்திற்கு ஒரு மூக்கையா என அண்ணா புகழாரம் சூட்டியதை நினைவுகூர்ந்தார். அதே போல், கார்ல் மார்க்ஸ் சிலையும் சென்னையில் நிறுவப்படும் என அறிவித்தார்.
Similar News
News March 24, 2026
லெபனானில் தாக்குதல்.. வெளியேறும் மக்கள்

ஈரானுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து, லெபனானையும் இஸ்ரேல் தாக்கி வருகிறது. இதனால், லெபனானில் தெற்கு பகுதியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு உயிர்பிழைக்க தஞ்சம் தேடி குடும்பத்துடன் வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5-ல் ஒரு பங்கு ஆகும்.
News March 24, 2026
புத்தர் பொன்மொழிகள்

▶உள்ளத்தில் கோபம் இருந்தால் மட்டுமே வெளியில் எதிரி இருக்க முடியும். ▶யாரிடம் குறைவான ஆசைகளும், மன அமைதியும் உள்ளதோ அவர்கள் கவலையின்றி வாழ்கிறார்கள். ▶வாழ்வில் நிலையான ஒரே விஷயம் மாற்றம் மட்டுமே என்பதை நினைவில்கொள்ளுங்கள். ▶அனைத்தும் நம் மனதின் பிரதிபலிப்பு என்பதால், நம் மனதால் அனைத்தையும் மாற்ற முடியும். ▶உங்கள் செயல்கள் மட்டுமே உங்களின் உண்மையான உடமைகள்.
News March 24, 2026
அமெரிக்காவுடனான ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். போர் பதற்றங்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அவர்கள் விவாதித்தனர். குறிப்பாக எரிசக்தி பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்தினர். போரை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றன.


