News March 18, 2025

செயற்கை இதயத்துடன் உயிர் வாழும் மனிதர்!

image

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக செயற்கை இதயத்துடன் 100 நாள் வாழ்ந்து ஒருவர் சாதனை படைத்துள்ளார். நியூ சவூத்வேல்ஸை சேர்ந்த அந்த நபருக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட, சிட்னியில் உள்ள ஹாஸ்பிடலில் டைட்டானியத்தில் உருவாக்கப்பட்ட BiVACOR என்ற செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. அதனுடன் 100 நாள் வரை அவர் கடந்திருக்கிறார். உலகிலேயே 6 பேருக்கு மட்டுமே இதுவரை செயற்கை இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது.

Similar News

News March 19, 2025

இதுதான் எனது ஒரே இலக்கு: ஸ்ரேயஸ் ஐயர்

image

பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் டிராஃபியை வெல்வதே தனது இலக்கு என ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு. அது ஒரு இமாலய சாதனையாக இருக்கும். சீசன் முடிவில் ஒரு பஞ்சாபி கொண்டாட்டம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

News March 19, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 19, 2025

பக்தர் குடும்பத்திற்கு ₹10 லட்சம் வழங்குக: அண்ணாமலை

image

திருச்செந்தூர் கோயிலில் உயிரிழந்த பக்தர் ஓம் குமாரின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் வழங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். மேலும் கோயில்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க, தமிழக அரசு முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். திருச்செந்தூர் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்ற ஓம் குமார், கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானார்.

error: Content is protected !!