News April 2, 2024
அடுத்த ஆட்சியில் ஊழலை ஒழிக்க மிகப்பெரிய நடவடிக்கை

3ஆவது முறையாக ஆட்சியமைத்ததும், ஊழலுக்கு எதிராக தற்போது எடுத்துள்ளதை விட, மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் 3வது முறையாக தனது அரசு ஆட்சியமைக்க இன்னும் சில நாள்களே இருப்பதாகவும், அதுபோல் மீண்டும் ஆட்சியமைத்ததும், ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Similar News
News January 12, 2026
BREAKING.. விஜய்க்கு நிம்மதி

பொங்கலுக்கு பிறகு விஜய்க்கு மீண்டும் சம்மன் அளிக்க CBI திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் துயரம் தொடர்பாக 2 நாள்கள் விஜய்யிடம் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விசாரணையில் இருந்து விஜய் விலக்கு கோரியதை CBI ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் சற்று நிம்மதி அடைந்துள்ளார். இன்று <<18837290>>விஜய்யிடம் 4:15 மணி நேரம் விசாரணை<<>> நடத்தப்பட்டது
News January 12, 2026
இரவிலும் மழை பெய்யும்

குமரிக்கடல், அதனையொட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
News January 12, 2026
டெல்லியில் காங்., தவெக கூட்டணி பேச்சுவார்த்தையா?

ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் திமுகவுக்கு ஒருபுறம் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், மறுபுறம் தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சும் தொடர்கிறது. இந்நிலையில் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றுள்ள விஜய்யிடம் பேசலாம் என காங்கிரஸின் ஒரு தரப்பு ராகுலிடம் ஆலோசித்துள்ளனர். ஆனால், இப்போது பேச வேண்டாம், கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என கட்சியினருக்கு ராகுல் ஸ்ட்ரிக்ட்டாக அறிவுறுத்தியுள்ளாராம்.


