News May 20, 2024
மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

தென்மேற்கு வங்கக் கடலில் மே 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது வடகிழக்காக நகர்ந்து மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 24ஆம் தேதி வரை தமிழகத்தில் கன அல்லது மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
நெல்லையில் நீச்சல் பயிற்றுநருக்கு அழைப்பு

நெல்லையில் கேலோ இந்தியா நீச்சல் மையம், பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இயங்குகிறது. இங்கு 30 வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நீச்சல் பயிற்சியாளர் பணியிடம் காலியாக உள்ளது. 40 வயதுக்குட்பட்ட, தேசிய/சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.25,000 கட்டணம், 11 மாதங்களுக்கு வழங்கப்படும். (விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.20) *ஷேர் செய்யுங்கள்
News August 15, 2025
உடலின் கழிவுகளை நீக்கும் லெமன் டீ

லெமன் டீ அருந்தும்போது *எலுமிச்சையில் உள்ள நுண்சத்துகள் அழற்சியை தடுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் * இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், & தாமிர சத்துகள் மூளையை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வு தரும், மனஅழுத்தம் நீங்கவும் உதவும் *மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கிறது, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது, இதனால் எடை குறையும் *உடலின் நச்சுகள், கழிவுகளை நீக்குவதால் நோய்கள் தடுக்கப்படும். SHARE IT!
News August 15, 2025
திமுகவின் வரலாறு இப்படிதான்: அண்ணாமலை சாடல்

குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பதே திமுக வரலாறு என அண்ணாமலை சாடியுள்ளார். நாகர்கோவில் திமுக நிர்வாகி ராஜன், கோயிலுக்கு ஒதுக்கிய ஒன்றரை கோடி நிதியை சுருட்டி விட்டதாகவும், இது குறித்து DVAC-ல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சமூக விரோதிகளை வளர்த்துவிடும் திமுகவிற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.