News November 23, 2024

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

image

தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 8.30 மணியளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு- வட மேற்காக நகர்ந்து 25ஆம் தேதி மத்திய வங்கக் கடலில் நிலை கொள்ளும். மேலும், அது தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், இதனால் வரும் 26 முதல் 28 வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 20, 2025

அடுக்கம்பாறை: நடுரோட்டில் பயணிகளை இறக்கி விட்ட அரசு பஸ்!

image

வேலூரில் இருந்து அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டான் குடிசை கிராமத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை அரசு பஸ் சென்றது. அடுக்கம்பாறை சென்றதும் காலதாமதம் ஆகிவிட்டதால் பஸ்சில் இருந்த பணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்டு திரும்பி சென்றனர். இதனால் பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து போக்கு வரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

News November 20, 2025

பிரபல நடிகை பிரதியுஷா மரணம்.. பரபரப்பு தகவல்

image

தவசி, மனுநீதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிரதியுஷாவின் மரணம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. காதலன் சித்தார்த் உடன் 2002-ல் விஷம் குடித்து அவர் உயிரிழந்தார். ஆனால், காதலன் உயிர்பிழைத்தார். இதுதொடர்பான SC வழக்கில், தான் குற்றமற்றவர் என சித்தார்த் வாதிட்டார். ஆனால், தனது மகளை தற்கொலைக்கு தூண்டியதே அவர்தான் என பிரதியுஷாவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

News November 20, 2025

கூட்டணி ரூட்டை மாற்றுகிறாரா விஜய்?

image

கொள்கை எதிரி பாஜக உடன் கூட்டணி கிடையாது என கூறிவந்த விஜய், தற்போது NDA கூட்டணியில் இணைவது பற்றி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. பிஹார் தேர்தலில் PK-வின் கட்சி மரண அடி வாங்கியதால், நாமும் தனித்து போட்டியிட்டால் படுதோல்வி அடைவோமோ என விஜய் யோசிக்கிறாராம். ஒருவேளை அதிமுக கூட்டணியில் இணைந்து 50 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளில் நிச்சயம் தவெக வெற்றி பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

error: Content is protected !!