News November 23, 2024

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

image

தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 8.30 மணியளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு- வட மேற்காக நகர்ந்து 25ஆம் தேதி மத்திய வங்கக் கடலில் நிலை கொள்ளும். மேலும், அது தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், இதனால் வரும் 26 முதல் 28 வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 18, 2025

அரவக்குறிச்சி அருகே பரபரப்பு!

image

அரவக்குறிச்சி அருகே தாளப்பட்டி கிராமத்தில் மாரப்பன் (49) மற்றும் அவரது குடும்பம் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அதிகாலை 1 மணியளவில் நான்கு மர்மநபர்கள் தடி, கடப்பாறை, கத்தி போன்ற ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் வனிதா (45) கழுத்தில் இருந்த 5½ பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொள்ளையர்கள் தப்பினர். புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 18, 2025

அதிமுகவிடம் 50+ தொகுதிகளை கேட்கிறதா பாஜக?

image

கூட்டணியில் இன்னும் எத்தனை கட்சிகள் வரப்போகின்றன என்பதை பொறுத்துதான் பாஜகவுக்கு எத்தனை இடம் என்பது முடிவு செய்யப்படும் என நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். 50+ தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கிறது என சொல்வது தவறு என்ற அவர், தேர்தல் காலம் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும் என விளக்கமளித்துள்ளார். அத்துடன், தொகுதி பங்கீட்டை அதிமுக, பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என அவர் கூறியுள்ளார்.

News November 18, 2025

100 ரஃபேல் விமானங்களை வாங்கும் உக்ரைன்

image

ரஷ்ய தாக்குதலை சமாளிக்க பிரான்ஸிடம் இருந்து 100 ரஃபேல் போர் விமானங்களை வாங்க உக்ரைன் முடிவு உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இருநாட்டு அதிபர்களும் கையெழுத்திட்டுள்ளனர். 2035-ம் ஆண்டுக்குள் இப்போர் விமானங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டசால்ட் ஏவியேஷன் தயாரிக்கும் ரஃபேல் போர் விமானங்கள், ஆபரேசன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!