News November 23, 2024
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 8.30 மணியளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு- வட மேற்காக நகர்ந்து 25ஆம் தேதி மத்திய வங்கக் கடலில் நிலை கொள்ளும். மேலும், அது தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், இதனால் வரும் 26 முதல் 28 வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 3, 2025
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ₹90.14 ஆக சரிவு

டாலருக்கு($) நிகரான ரூபாயின்(₹) மதிப்பு வரலாறு காணாத வகையில் ₹90.14 ஆக சரிந்துள்ளது. கடந்த ஜனவரியில் ₹86.45 ஆக இருந்த ₹ மதிப்பானது பல மாதங்களாக பெரிய அளவில் மாற்றமின்றி நீடித்தது. ஆனால், தற்போது USA வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் சரிவை கண்டுள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி பொருள்களுக்கான செலவு இந்தியாவில் பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
News December 3, 2025
TN-ல் இந்தி கற்க முடியவில்லை: எல்.முருகன்

தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை காரணமாக தன்னால் இந்தி கற்க முடியவில்லை என எல்.முருகன் கூறியிருக்கிறார். இதனால் டெல்லி சென்ற பிறகுதான் இந்தி கற்றதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் அந்த வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டது ஏன் என கேட்டுள்ளார். மேலும் இந்தி கற்பது தன்னுடைய உரிமை எனவும் ஆனால், மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கிறது என்று கூறி தமிழகம் அதனை எதிர்க்கிறது என்றும் அவர் பேசியுள்ளார்.
News December 3, 2025
புயல் சின்னம்.. மழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. காலை 5.30 மணி நிலவரப்படி புதுச்சேரி அருகே கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தரைப்பகுதிக்கு வந்ததும் மேலும் வலுவிழக்கும் எனவும் கணித்துள்ளது. மேலும், அடுத்த 2 மணி நேரத்திற்கு காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.


