News November 23, 2024
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 8.30 மணியளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு- வட மேற்காக நகர்ந்து 25ஆம் தேதி மத்திய வங்கக் கடலில் நிலை கொள்ளும். மேலும், அது தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், இதனால் வரும் 26 முதல் 28 வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 25, 2025
BREAKING: சஸ்பென்ஸை உடைத்தார் செங்கோட்டையன்

அதிமுகவில் EPS மீது அதிருப்தியில் உள்ள தலைவர்களை கண்டறிந்து அவர்களுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், பொங்கலுக்கு பிறகு அதிமுகவில் இருந்து பல தலைவர்கள் தவெகவை நோக்கி வருவார்கள் என சஸ்பென்ஸை உடைத்துள்ளார். இதனால், யார் அந்த தலைவர்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது. தென் மாவட்டத்தில் இருவர், டெல்டா மற்றும் கொங்கு மண்டலத்தில் ஒருவர் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
News December 25, 2025
12th Pass போதும்.. மத்திய அரசில் 394 காலியிடங்கள்!

தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ➤கல்வித்தகுதி: 12-வது தேர்ச்சி ➤வயது: 18- 21 ➤சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபட்டது ➤தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, அறிவுத்திறன் & ஆளுமைத் தேர்வுகள் நடைபெறும் ➤விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 30 ➤விண்ணப்பிக்க இங்கே <
News December 25, 2025
யார் இந்த சீமா அகர்வால்?

TN-ன் புதிய டிஜிபி ரேஸில் டாப்பில் இருக்கும் <<18664993>>சீமா அகர்வால்<<>>, ராஜஸ்தானை சேர்ந்தவர். 1990-ம் ஆண்டு தமிழ்நாடு IPS பேட்ஜை சேர்ந்த இவர், தொடர்ந்து தமிழகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் டிஜிபியாக இருக்கிறார். இவரது கணவர் சென்னை முன்னாள் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். தமிழக டிஜிபியாக இவர் பதவியேற்றால், தமிழகத்தின் 2-வது பெண் டிஜிபி என்ற சிறப்பை பெறுவார்.


