News January 21, 2025
தூக்கில் போகாத உயிர்… இப்படியா ஆகணும்?

ராஜஸ்தான் பில்வாராவில், ஒரு பெண் தூக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயல, உறவினர் ஒருவர் பார்த்து, மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு, ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார். ஆனால், அங்கு ஆம்புலன்ஸ் கதவு ஜாமாகி திறக்க முடியாமல் 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகியுள்ளது. இதற்குள் அந்த பெண் இறந்துவிட்டார். இந்த மரணத்துக்கு ஆம்புலன்ஸ் கதவு ஜாம் ஆனதுதான் காரணம் என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Similar News
News August 26, 2025
₹2000 வரை கட்டணம் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி

விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி, மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், ஆம்னி பஸ்களில் இரண்டு மடங்கு ( ₹2000 வரை) கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ₹4,000 வரையும், சென்னையில் இருந்து திருச்சிக்கு ₹2,500 வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
News August 26, 2025
மாதம் ₹210 கட்டுனா போதும், ₹5000 பென்ஷன் வாங்கலாம்..

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள இப்பவே பணம் சேமிக்கிறீங்களா? மாதம் வெறும் ₹210 கட்டினால், 60 வயதான பிறகு மாதம் ₹5000 பென்ஷனாக வழங்குகிறது அடல் பென்ஷன் யோஜனா ஸ்கீம். 18-40 வயதிற்குள் இருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர அருகிலுள்ள வங்கி/தபால் நிலையத்திற்கு சென்று, APY படிவத்தை நிரப்பி உரிய ஆவணத்துடன் சமர்ப்பியுங்கள். இதற்கான தொகையை npscra.nsdl.co.in வழியாக செலுத்தலாம். SHARE IT.
News August 26, 2025
ஓஹோ.. இதுதான் விநாயகர் சதுர்த்தியின் கதையா!

மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ கொல்ல முடியாத வரம் பெற்றிருந்த கஜமுகாசுரனை விநாயகர் ஆவணி மாத சதுர்த்தி தினத்தில் வதம் செய்தார். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தியில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் மக்கள் ஒன்றுகூட தடை இருந்த நிலையில், மக்களை திரட்ட எண்ணிய பாலகங்காதர திலகர், 1893-ல் இந்த பண்டிகையை சமூக நிகழ்வாக மாற்றி, இன்றைய கொண்டாடத்திற்கான வடிவத்தை கொடுத்தார்.