News December 27, 2024
எளியவர்களுக்கும் அதிகாரம் அளித்த தலைவர்

மன்மோகன் சிங் ஆட்சியில், சில திட்டங்கள் சாதாரண குடிமகனுக்கு அதிகாரம் அளிப்பதாக அமைந்தது. அப்படிதான், தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், அரசு துறைகள் மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்கள் சார்ந்த முக்கிய தகவல்களை கேட்டு பெறும் அதிகாரம் சாதாரண மனிதனுக்கும் கிடைத்தது. மேலும், எல்.பி.ஜி. கொள்கை, ஆதார் அட்டை திட்டம் உள்ளிட்டவையும் அவர் அறிமுகம் செய்தவையே.
Similar News
News August 16, 2025
ரஷ்யா போரை நிறுத்தாது: உக்ரைன் அதிபர் உருக்கம்

தங்கள் மீதான போரை ரஷ்யா நிறுத்தப் போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தைகள் அலாஸ்காவில் துவங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன் வீடியோ வெளியிட்டு இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார். தற்போதும் ரஷ்யா தங்களது மக்களை கொன்று குவித்து வருவதாகவும், போர் நிறுத்தத்தை அவர்கள் விரும்புவதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
News August 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 429 ▶குறள்: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். ▶ பொருள்: வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.
News August 16, 2025
திமுக கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்

தூய்மை பணியாளர்களை வைத்து அரசியல் செய்வது அற்பமானது என திருமா விமர்சித்துள்ளார். அவர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரது நோக்கமாக இருப்பதாக கூறினார். சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 11- யை தனியாருக்கு கொடுத்தது கடந்த அதிமுக ஆட்சியில் என்றும், அதற்கு அவர்களிடம் என்ன பதிலுள்ளது என கேட்டார். தற்போது 2 மண்டலங்களை தனியாருக்கு விட்ட திமுக அதனை திரும்பபெற கோரிக்கை விடுத்தார்.