News May 13, 2024

மொபைல் ஃபோனால் சிக்கிய கொலையாளி

image

ஆக்ராவில் 10 மாதங்களுக்கு பிறகு கொலையாளி ஒருவர் செல்ஃபோன் சிக்னல் மூலம் சிக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜய் பதக் (42) என்பவர் 10 மாதங்களுக்கு முன் காணாமல் போனார். இந்நிலையில் அவரது செல்ஃபோனின் சிக்னல் திடீரென கிடைத்ததால், போலீசார் அதனை தேடிச் சென்றனர். அஜய் பதக்கின் வீட்டில் வேலை செய்த சுஷில் குமார் என்பவர்தான் கொலை செய்துவிட்டு செல்ஃபோனை எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது.

Similar News

News August 6, 2025

BREAKING: ரெப்போ வட்டியில் மாற்றமில்லை

image

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.5%ஆக இருந்தது. இன்றைய அறிவிப்பில் 0.5% வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், வீடு, வாகனம் கடனுக்கான வட்டியிலும் மாற்றமில்லை. வட்டி உயர்த்தப்படாததால் லோன் வாங்கியவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

News August 6, 2025

தீ விபத்தால் ரத்தானது கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி

image

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் இன்று ஹையாத் நட்சத்திர விடுதியில் தொடங்க இருந்தது. ஆனால் நட்சத்திர விடுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தால் செஸ் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ஒரு கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது.

News August 6, 2025

மழையில் ஃபோன் நனையாமல் காக்க…

image

மழையில் உங்கள் ஃபோன் நனையாமல் காக்க, எப்போதும் வாட்டர்புரூப் பவுச் வைத்திருக்கவும் *ஜிப்லாக் பவுச் மற்றும் சிலிகா ஜெல் பாக்கெட்களும் உங்கள் போன் ஈரமாகாமல் காக்கும் *அழைப்புகளை ஏற்க புளூடூத் ஹெட்போன்கள் பயன்படுத்தலாம் *மழையில் போனில் ஈரம் புகுந்துவிட்டால், சார்ஜ் போடுவதை கட்டாயம் தவிர்க்கவும் *அரிசிக்குள் (அ) சிலிகா ஜெல் பாக்கெட்கள் கொண்ட ஜிப்லாக் கவரில் ஈரம் உறிஞ்சப்படும் வரை போட்டு வைக்கலாம்.

error: Content is protected !!