News June 26, 2024
நாளை இபிஎஸ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரியும் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News December 4, 2025
BREAKING: ஏவிஎம் சரவணன் காலமானார்

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரான AVM சரவணன் (86) காலமானார். ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து திரைப்படம் தயாரித்தவர். குறிப்பாக, AVM தயாரிப்பில் உருவான ‘சிவாஜி’ திரைப்படம் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்திருந்தது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற சரவணன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News December 4, 2025
இந்திய மண்ணில் சாதனை படைத்த ரோஹித்!

SA-வுக்கு எதிரான 2-வது ODI-ல் 14 ரன்களில் அவுட்டானாலும், ரோஹித் சர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில், இந்திய மண்ணில் 9 ஆயிரம் ரன்களை அடித்த வீரர்களின் லிஸ்ட்டில் அவர் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் (14,192 ரன்கள்) முதல் இடத்திலும், கோலி (12,475 ரன்கள்) 2-வது இடத்திலும் உள்ளனர். டிராவிட்டை (9,004 ரன்கள்) முந்தி ரோஹித் சர்மா (9,005 ரன்கள்) 3-வது இடத்தில் முன்னேறியுள்ளார்.
News December 4, 2025
மக்களை திருத்தவே முடியாது: தமிழருவி மணியன்

இனி காமராஜர் மக்கள் கட்சியை நடத்துவதில் பயனில்லை என தமிழருவி மணியன் பேசியுள்ளார். எந்த கைமாறும் இல்லாமல் 16 ஆண்டுகள் கட்சி நடத்தியதாக கூறிய அவர், மக்களிடம் மாற்றம் வராததால் கட்சியை கலைத்து, தன்னுடன் இருந்தவர்களை தமாகாவில் சேர்த்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், பணம் எதுவும் வாங்காமல் ஓட்டு போடும் நிலையில் இப்போது மக்கள் இல்லை எனவும் இது திருத்தவே முடியாத சமூகம் என்றும் அவர் கொந்தளித்துள்ளார்.


