News June 26, 2024

நாளை இபிஎஸ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரியும் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News December 30, 2025

யார் இந்த கிரிக்கெட் வீரர்? கண்டுபிடியுங்க

image

அயராது உழைத்தால் எந்த உயரத்தையும் அடையலாம் என்பதற்கு இந்த போட்டோவில் உள்ள சிறுவன் உதாரணம். ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அச்சிறுவன் தனது லட்சியத்தை நோக்கி உழைத்து, தற்போது கிரிக்கெட் உலகில் கலக்கி வருகின்றான். Chinaman பவுலர் என அழைக்கப்படும் அந்த வீரரின் சுழற்பந்துவீச்சை அடிக்கமுடியாமல் ஜாம்பவான் வீரர்கள் கூட தடுமாறுகின்றனர். CSK-விற்காக ஆடுகிறார். யார் அவர்? கமெண்ட்ல சொல்லுங்க

News December 30, 2025

தமிழகத்தில் நிலவும் காட்டு ராஜ்ஜியம்: அண்ணாமலை

image

திருத்தணி சம்பவத்தில் குற்றவாளிகள் கைதாகியிருந்தாலும், பல ரவுடிகள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது X பதிவில் அவர், TN-ல் போதைப் பொருள் புழக்கம், வன்முறையை ஊக்குவித்தல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான பிரசாரம் சர்வ சாதாரணமாகிவிட்டதாக கூறியுள்ளார். நன்றாக இருந்த TN-ஐ காட்டு ராஜ்ஜியமாக மாற்றியதற்கு திமுக அரசே பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 30, 2025

விவேகானந்தர் பொன்மொழிகள்!

image

*நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது *பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது *கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும் *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்

error: Content is protected !!