News March 18, 2024
கூட்டணி குறித்து முடிவெடுக்க பாமக உயர்மட்டக் குழு கூடியது

மக்களவைத் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க பாமக உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது. தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி, ஜி.கே.மணி, பேரா. தீரன், வடிவேல் ராவணன், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டம் முடிந்தவுடன் கூட்டணி முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 13, 2025
CM தலைமையில் இன்று கூடும் அமைச்சரவை

CM ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இம்மாத இறுதியில் CM, தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு செல்ல உள்ளதால், அதுபற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
News August 13, 2025
சிம்ம முகத்துடன் காட்சி தரும் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி!

கும்பகோணம் அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி சிம்ம முகம், 18 கரத்துடன் காணப்படுகிறாள். கவுரவர்களிடம் தோற்று காட்டுக்கு சென்ற பஞ்ச பாண்டவர்கள் நாட்டை மீட்க, இங்கு வந்து யாகம் வளர்த்து பிரத்யங்கிரா தேவியை வழிபட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இன்றளவும் அமாவாசை தோறும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டால் மன தைரியம் கிடைக்கும். SHARE IT.
News August 13, 2025
கைதுக்கு முன்பே திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பொன்வசந்த்

சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மேயர் இந்திராணியின் கணவரும், திமுகவின் முக்கிய முகமாக இருந்தவருமான பொன்வசந்த் நேற்று கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, திமுக ஆட்சியில் ஊழல் நடப்பதற்கு இதுவே சான்று என்று அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், பொன்வசந்த் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவுடன், கைது நடவடிக்கைக்கு முன்னரே, அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக திமுகவினர் பதிலளித்து வருகின்றனர்.