News April 21, 2025

அமைதியை விரும்புவோருக்கு பேரிழப்பு: விஜய்

image

கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் X தளம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது போஸ்டில், போப்பின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனைக்குள்ளானதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைதியை விரும்புவோருக்கு இது பேரிழப்பு என்றும் அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார்.

Similar News

News August 24, 2025

இதுதான் பங்குச்சந்தை யுக்தியா? என்ன நடந்தது?

image

இந்தியாவின் பட்டியலிடப்பட்ட ஒரே ஆன்லைன் கேமிங் நிறுவனம் Nazara Technologies. இந்நிறுவனத்தின் ₹334 கோடி மதிப்பிலான பங்குகளை கடந்த ஜூனில், பிரபல முதலீட்டாளர் ரேகா ஜுன்ஜுவாலா விற்றுள்ளார். ஆன்லைன் கேமிங் மசோதா தாக்கலாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இவ்வாறு அவர் செய்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே கடந்த 5 நாள்களாக இந்நிறுவனத்தின் பங்குகள் 15.85% அளவு குறைந்துள்ளன.

News August 24, 2025

சென்னையில் நடிகை கைது

image

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற புகாரில் ஆந்திராவைச் சேர்ந்த துணை நடிகை நாகம்மா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை இறந்த நிலையில், தாய் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால், ஆதரவற்று இருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நாகம்மா இந்த கொடுமையை செய்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீஸ் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

News August 24, 2025

விசிலடிச்சான் குஞ்சாகி விட்டாரா விஜய்? அமைச்சர்

image

தவெக மாநாட்டில் ‘ஸ்டாலின் Uncle’ என முதல்வரை விஜய் குறிப்பிட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், 50 ஆண்டு பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான முதல்வரை விஜய் இவ்வாறு விமர்சித்திருப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தவெக தொண்டர்களே மெச்சூரிட்டி ஆன நிலையில், விஜய் விசிலடிச்சான் குஞ்சாகி விட்டாரா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!