News September 14, 2024

UPI பயனர்களுக்கு ஓர் நற்செய்தி

image

ஒரு குறிப்பிட்ட UPI பரிவர்த்தனைக்கு ஒரே நேரத்தில் ₹5 லட்சம் வரை பணம் செலுத்தும் வசதி நாளை (செப்.15) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. நிதிக் கொள்கை மறுஆய்வில் RBI எடுத்த இம்முடிவை அடுத்து, நாட்டில் UPI செயல்பாடுகளை நிர்வகிக்கும் NPCI பரிவர்த்தனை வரம்புகளை அதிகரித்துள்ளது. IT வரி, மருத்துவம் & கல்வி கட்டணங்கள், IPO, அரசுப் பத்திரங்கள் போன்றவற்றுக்கு UPI மூலம் இனி ₹5 லட்சம் வரை
செலுத்த முடியும்.

Similar News

News November 15, 2025

BREAKING: கொந்தளித்தார் விஜய்

image

மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கான ஆலோசனை கூட்டங்களுக்கு தவெகவை அழைப்பதில்லை என்று விஜய் கொந்தளித்துள்ளார். இதுதொடர்பாக ECI-க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான தவெகவை அழைக்காமலேயே ஆலோசனை கூட்டங்களை நடத்துவது ஜனநாயகம் ஆகாது. எனவே, இனி நடைபெறும் ஆலோசனை கூட்டங்களுக்கு தவெகவை அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News November 15, 2025

ஜம்மு காஷ்மீர் வெடிவிபத்து தற்செயலானது: DGP விளக்கம்

image

J&K நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்து தற்செயலாக நடந்தது என அம்மாநில டிஜிபி நலின் பிரபாத் தெரிவித்துள்ளார். ஃபரீதாபாத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்களின் மாதிரிகளை தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார். இதில், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News November 15, 2025

10 ஆண்டுகளாக Bank Account யூஸ் பண்ணலையா?

image

10 ஆண்டுகளை கடந்தும் எந்த பரிமாற்றமும் இல்லாத வங்கிக் கணக்குகளை ‘UDGAM’ என்ற போர்ட்டல் மூலம் மீட்டெடுக்கலாம். வாடிக்கையாளர் (அ) சட்டப்பூர்வ வாரிசுகள், தங்களது மொபைல் எண், பயனர் பெயரை உள்ளிட்டு தகவலை பெற்று, பணத்தை எடுக்கலாம். அதேநேரம், நேரடியாக வங்கிகளுக்கு சென்று ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதாவதொரு அடையாள அட்டையை சமர்ப்பித்தும் பணத்தை பெறலாம்.

error: Content is protected !!