News April 6, 2025
₹43 லட்சம் கோடியில் பிரம்மாண்ட கட்டடம்!

போயிங் ஆலையை விட 5 மடங்கு பெரியது. 20 எம்பையர் ஸ்டேட் கட்டடத்தை விழுங்கும் அளவுக்கு உலகின் மிகப் பெரிய கட்டடத்தை எழுப்பி வருகிறது சவுதி அரசு. சுற்றுலாவை ஈர்க்க ரியாத்தில் சுமார் ₹43 லட்சம் கோடி செலவில் 400 மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட்டு வருகிறது. ஆடம்பர ஓட்டல்கள், தியேட்டர்கள், ரூப் டாப் கார்டன்கள் என அத்தனையும் இதற்குள் இருக்குமாம். 2030க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
தீரன் அதிகாரம் ஒன்று பார்ட் 2?

‘ஜனநாயகன்’ படத்திற்கு முன்னதாகவே H வினோத், தனுஷை இயக்கவிருந்தார். ஆனால், விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், தனுஷை வெயிட்டிங்கில் வைத்தார். இந்நிலையில், மீண்டும் தனுஷ் படத்தின் பணிகளை வினோத் தொடங்கியுள்ளாராம். அத்துடன், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் 2-ம் பாகத்தையும் அவர் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் மீண்டும் கார்த்தியுடன் இணையவுள்ளதாக தெரிகிறது.
News December 27, 2025
மதநல்லிணக்கத்தை குலைக்க பஹல்காம் தாக்குதல்: அமித்ஷா

பஹல்காம் தாக்குதல் மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக நடத்தப்பட்டது என அமித்ஷா கூறியுள்ளார். ஆனால், ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாம் தக்க பதிலடி கொடுத்ததன் மூலம் பாக்.,க்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 40 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் புதிய தகவலை அமித்ஷா வெளியிட்டுள்ளார்.
News December 27, 2025
கோலிய அவுட்டாக்கிட்டேன்.. விஷால் ஜெய்ஸ்வால்

VHT தொடரில் விராட் கோலியை (டெல்லி), குஜராத் அணியின் விஷால் ஜெய்ஸ்வால் ஸ்டெம்பிங் செய்து அவுட்டாக்கினார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய கோலியுடன் ஒரே மைதானத்தில் விளையாடியது மட்டுமல்லாமல், அவரின் விக்கெட்டையும் எடுத்தது தான் கற்பனை கூட செய்து பார்க்காத ஒன்று என விஷால் எமோஷனலாக கூறியுள்ளார். இந்த வாய்ப்பை கொடுத்த விளையாட்டுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.


