News April 6, 2025

₹43 லட்சம் கோடியில் பிரம்மாண்ட கட்டடம்!

image

போயிங் ஆலையை விட 5 மடங்கு பெரியது. 20 எம்பையர் ஸ்டேட் கட்டடத்தை விழுங்கும் அளவுக்கு உலகின் மிகப் பெரிய கட்டடத்தை எழுப்பி வருகிறது சவுதி அரசு. சுற்றுலாவை ஈர்க்க ரியாத்தில் சுமார் ₹43 லட்சம் கோடி செலவில் 400 மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட்டு வருகிறது. ஆடம்பர ஓட்டல்கள், தியேட்டர்கள், ரூப் டாப் கார்டன்கள் என அத்தனையும் இதற்குள் இருக்குமாம். 2030க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News

News April 7, 2025

வாடிவாசல் படப்பிடிப்பு எப்போ? அப்டேட் தந்த தாணு

image

வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என காத்திருக்கும் ரசிகர்களுக்காக மிகப்பெரிய அப்டேட் வந்துள்ளது. ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். படத்தின் பாடல் மிக அருமையாக வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாட்டை கேட்டால் யார் இந்த பாடல் ஆசிரியர் என கேட்கும் அளவுக்கு வரிகள் சிறப்பாக உள்ளதாகவும் சிலாகித்துள்ளார் தாணு.

News April 7, 2025

வங்கக்கடலில் புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம்

image

தெற்கு வங்கக்கடலில் இன்று அல்லது நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி(புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று(ஏப்.7) முதல் 12ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2025

எந்த மதத்தையும் பாஜக விட்டு வைக்க போவதில்லை: உத்தவ்

image

வக்ஃப் திருத்த மசோதாவை அமல்படுத்திய பிறகு, பாஜக தற்போது கிறிஸ்தவர்கள், சமணர்கள், பவுத்தர்கள் மற்றும் இந்து கோவில்களின் நிலங்கள் மீதும் கண் வைத்துள்ளதாக மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். எந்த சமூகத்தின் மீதும் பாஜகவுக்கு அக்கறை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். பாஜகவின் அத்துமீறல்களை அனைவரும் கண்களை திறந்து பார்க்க வேண்டும் எனவும் உத்தவ் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!