News April 6, 2025
₹43 லட்சம் கோடியில் பிரம்மாண்ட கட்டடம்!

போயிங் ஆலையை விட 5 மடங்கு பெரியது. 20 எம்பையர் ஸ்டேட் கட்டடத்தை விழுங்கும் அளவுக்கு உலகின் மிகப் பெரிய கட்டடத்தை எழுப்பி வருகிறது சவுதி அரசு. சுற்றுலாவை ஈர்க்க ரியாத்தில் சுமார் ₹43 லட்சம் கோடி செலவில் 400 மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட்டு வருகிறது. ஆடம்பர ஓட்டல்கள், தியேட்டர்கள், ரூப் டாப் கார்டன்கள் என அத்தனையும் இதற்குள் இருக்குமாம். 2030க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Similar News
News December 31, 2025
குமரி: ஓடும் பஸ்ஸில் ராணுவ வீரர் தற்கொலை!

குமரி, வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் கார்த்திக் (26) கடந்த 19ம் தேதி பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு பஸ்ஸில் வந்துள்ளார். வரும் வழியில் ஓடும் பஸ்ஸில் வைத்து விஷம் குடித்ததாக தெரிகிறது. இவர் இருக்கையில் அமர்ந்த படி மயங்கி விழுந்தார். இதனையடுத்து மருத்துவத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் இறந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து வெள்ளிச்சந்தை போலீஸார் விசாரனை.
News December 31, 2025
அதிமுக – பாஜக கூட்டணி.. பிரச்னை வெடித்தது

TN-ல் NDA கூட்டணி வென்றால், பாஜக ஆட்சியில் அங்கம் வகிக்குமா என்பதை டெல்லி தலைமைதான் முடிவு செய்யும் என ஹெச்.ராஜா பேசியுள்ளார். முன்னதாக, ’கூட்டணி ஆட்சி’ முழக்கத்தால் அதிமுக-பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இது சமீபகாலமாக இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அதை மீண்டும் ஹெச்.ராஜா தொடங்கி வைத்திருக்கிறார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணியில் மீண்டும் பிரச்னை வெடிக்கலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 31, 2025
ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு.. ₹80,915 கோடி நஷ்டம்!

தலைப்பை படித்ததும் நம்ப முடியவில்லையா? உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை 2022-ல் ‘insane’ என கண்டித்தார் ரஷ்யாவின் Tinkoff வங்கியின் நிறுவனர் ஒலெக் டின்கோவ். அந்த ஒரே பதிவு அவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. பங்குகளை விற்காவிட்டால் வங்கி தேசியமயமாக்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் தனது 35% பங்குகளை விற்றுள்ளார். இதன் காரணமாக, அவர் ₹80,915 கோடியை இழந்துள்ளார்.


