News April 6, 2025
₹43 லட்சம் கோடியில் பிரம்மாண்ட கட்டடம்!

போயிங் ஆலையை விட 5 மடங்கு பெரியது. 20 எம்பையர் ஸ்டேட் கட்டடத்தை விழுங்கும் அளவுக்கு உலகின் மிகப் பெரிய கட்டடத்தை எழுப்பி வருகிறது சவுதி அரசு. சுற்றுலாவை ஈர்க்க ரியாத்தில் சுமார் ₹43 லட்சம் கோடி செலவில் 400 மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட்டு வருகிறது. ஆடம்பர ஓட்டல்கள், தியேட்டர்கள், ரூப் டாப் கார்டன்கள் என அத்தனையும் இதற்குள் இருக்குமாம். 2030க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
தான்தோன்றிமலை: வயிற்று வலியால் நேர்ந்த சோகம்

கரூர், தான்தோன்றிமலை அருகே வடமாநிலத்தை சேர்ந்த அகமது தூபி என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில வருடங்களாக வயிற்று வலியின் காரணமாக இருந்த நிலையில் நேற்று மன விரக்தியில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 2, 2026
சற்றுமுன்: பொங்கல் பரிசு.. இனிப்பான செய்தி

பொங்கல் பரிசுத் தொகுப்பாக 2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜன.8-ம் தேதி பொங்கல் தொகுப்பு விநியோகத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரொக்கப் பணம் வழங்குவது குறித்து அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 2, 2026
தொடர் போராட்டம்.. ஆசிரியர்கள் கைது

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரிய ஜாக்டோ – ஜியோ அமைப்பினருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியான நிலையில், மறுபுறம் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு துயரமே மிஞ்சியுள்ளது. 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். இவர்களின் கோரிக்கைகளுக்கும் அரசு தீர்வுகாண வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.


