News April 6, 2025

₹43 லட்சம் கோடியில் பிரம்மாண்ட கட்டடம்!

image

போயிங் ஆலையை விட 5 மடங்கு பெரியது. 20 எம்பையர் ஸ்டேட் கட்டடத்தை விழுங்கும் அளவுக்கு உலகின் மிகப் பெரிய கட்டடத்தை எழுப்பி வருகிறது சவுதி அரசு. சுற்றுலாவை ஈர்க்க ரியாத்தில் சுமார் ₹43 லட்சம் கோடி செலவில் 400 மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட்டு வருகிறது. ஆடம்பர ஓட்டல்கள், தியேட்டர்கள், ரூப் டாப் கார்டன்கள் என அத்தனையும் இதற்குள் இருக்குமாம். 2030க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News

News January 9, 2026

உண்மையான காதலுக்கு எண்ட் கார்டே கிடையாது!

image

முதல் காதலை மறக்கவே முடியாது என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. டீன்-ஏஜில் காதலித்து, அப்போதே பிரிந்துவிட்டனர் ஜெயபிரகாஷும் ரேஷ்மாவும். விதிவசத்தால் அண்மையில் அவர்கள் சந்திக்க நேர்ந்துள்ளது. வாழ்க்கைத் துணைகளை இழந்த இருவரும் தங்கள் பழைய நினைவுகளை அசைபோட, தங்கள் பிள்ளைகளின் சம்மதத்துடன் 60-வது வயதில் மீண்டும் கரம்பிடித்துள்ளனர். இவர்களை வாழ்த்தலாமே!

News January 9, 2026

டைஃபாய்டு காய்ச்சலால் ஆண்டுக்கு 8,000 பேர் மரணம்

image

இந்தியாவில் டைஃபாய்டு காய்ச்சலால் ஆண்டுக்கு 49 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், 8000 பேர் வரை உயிரிழப்பதாகவும் ICMR விஞ்ஞானி காமினி வாலியா தெரிவித்துள்ளார். அதிகம் பயன்படுத்தப்பட்ட புளோரோகுய்னோலோன் மருந்துக்கு டைஃபாய்டு கிருமிகள் தற்போது கட்டுப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் டைஃபாய்டு காய்ச்சலை சரியான பரிசோதனை மூலம் கண்டுபிடிக்காததாலேயே உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.

News January 9, 2026

ரயில் டிக்கெட் தள்ளுபடி.. முக்கிய அறிவிப்பு வெளியானது

image

பொங்கல் பண்டிகையையொட்டி பலரும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரயில் டிக்கெட் புக்கிங்கில் 3% வரை தள்ளுபடி பெறலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. RailOne ஆப்பில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கே இந்த சலுகை கிடைக்கும். பெரும்பாலோர் ரயில் டிக்கெட் புக் செய்ய IRCTC ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். RailOne ஆப்பின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE.

error: Content is protected !!