News April 18, 2024
வெயிலில் சருமத்தை காக்கும் மலர் குளியல்!

வெயில் காலத்தில் ஏற்படும் வெப்ப புண்கள், அரிப்பு & பூஞ்சை தொற்று போன்ற சரும நோய்களில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள மலர் குளியலை சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. ரோஜா இதழ்கள், மகிழம் பூ, ஆவாரம் பூ, பன்னீர் பூ, மல்லிகைப்பூ, சாமந்தி பூ, ரோஸ்மேரி பூ, ஆவாரம் பூ ஆகியவற்றை மஸ்லின் துணியில் முடிச்சிட்டு வெந்நீரில் போட்டு அதில் குளியுங்கள். உடலில் உள்ள கழிவுகள் & துர்நாற்றம் நீங்கி சருமம் பொலிவு பெறும்.
Similar News
News January 20, 2026
ரூ.4.15 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்து சாதனை

2025-ல் இந்தியா ரூ.41.5 கோடிக்கு எலக்ட்ரானிக் பொருள்கள் ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி அதிகரிப்பால், நாட்டில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி, அந்நியச் செலாவணி வரத்தும் மேம்பட்டுள்ளது என்றும், 4 செமி கண்டக்டர் ஆலைகள் வணிக ரீதியான உற்பத்தியை தொடங்குவதால் 2026-லும் இந்த வளர்ச்சி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
இனிமேல் அமைதியை பற்றி யோசிக்க மாட்டேன்: டிரம்ப்

8 போர்களை நிறுத்த நடவடிக்கை எடுத்தும், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு எழுதிய கடிதத்தில், நோபல் பரிசு கிடைக்காததால் இனி அமைதியை பற்றி சிந்திக்க வேண்டிய கடமை இல்லை. அமெரிக்க நலனை பற்றி மட்டுமே சிந்திக்க போவதாக தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
2047-குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: SBI

இந்தியா பொருளாதார ரீதியாக ஜெட் வேகத்தில் வளர்ந்து வருவதாக சமீபத்திய SBI அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2028-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும், 2030-ம் ஆண்டுக்குள் ‘உயர் நடுத்தர வருமானம்’ கொண்ட நாடுகளின் பட்டியலில் இது சேரும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 2047-ம் ஆண்டுக்குள் ‘வளர்ந்த நாடாக’ இந்தியா இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


