News April 30, 2024
₹23,000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய விவசாயி மகன்

இந்தியாவின் முன்னணி சோப் பவுடர் நிறுவனமான நிர்மா, ₹23,000 கோடிக்கும் மேல் வருவாய் கொண்டதாகும். குஜராத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி மகனான கர்சன்பாய் படேல் என்பவரே ₹15,000 கடன் வாங்கி அதனை 1969இல் தொடங்கினார். முதலில் சைக்கிளில் சென்று நிர்மா பவுடரை விற்றார். பிறகு சிறிய ஆலையை ஏற்படுத்தி, கிலோ ₹15க்கு விற்றதால், நல்ல வரவேற்பு பெற்று ஆண்டுக்கு ₹7,000 கோடி லாபம் ஈட்டி நிர்மா சாதனை படைத்தது.
Similar News
News November 19, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

கடந்த 5 நாள்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று(நவ.19) தடாலடியாக உயர்வை கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,500-க்கும், சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹92,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் இந்திய பங்குச்சந்தைகளில் தொடர் சரிவு காரணமாக தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
News November 19, 2025
பள்ளி செல்லும்போது மாணவி கொலை.. தமிழகத்தில் அதிர்ச்சி

பள்ளிக்கு செல்லும் வழியில் +2 மாணவியை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்த மாணவியை மறித்த சேராங்கோட்டையை சேர்ந்த இளைஞர் முனியராஜ் காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவியை கழுத்தில் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
News November 19, 2025
தமிழகத்தை பழிவாங்கும் பாஜக அரசு: CM ஸ்டாலின்

மதுரைக்கும், கோவைக்கும் “NO METRO” என மத்திய அரசு நிராகரித்துள்ளதாக CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் சிறிய மாநகரங்களுக்கு கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பது அழகல்ல. பாஜகவை தமிழர்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என சாடிய அவர், மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம் என கூறியுள்ளார்.


