News April 30, 2024

₹23,000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய விவசாயி மகன்

image

இந்தியாவின் முன்னணி சோப் பவுடர் நிறுவனமான நிர்மா, ₹23,000 கோடிக்கும் மேல் வருவாய் கொண்டதாகும். குஜராத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி மகனான கர்சன்பாய் படேல் என்பவரே ₹15,000 கடன் வாங்கி அதனை 1969இல் தொடங்கினார். முதலில் சைக்கிளில் சென்று நிர்மா பவுடரை விற்றார். பிறகு சிறிய ஆலையை ஏற்படுத்தி, கிலோ ₹15க்கு விற்றதால், நல்ல வரவேற்பு பெற்று ஆண்டுக்கு ₹7,000 கோடி லாபம் ஈட்டி நிர்மா சாதனை படைத்தது.

Similar News

News August 20, 2025

FLASH: குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி!

image

ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் சிகிலி கிராமத்தில் குளத்தில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, வழியில் இருந்த குளத்தில் குழந்தைகள் குளித்தபோது இந்த துயரம் நடந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 5-ம் வகுப்பு மாணவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. So Sad..!

News August 20, 2025

மாலை 6 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

image

*PM, CM, மத்திய அமைச்சர்கள் 30 நாள்கள் வரை சிறையில் இருந்தால், அவர்களது பதவி பறிக்கும் <<17462647>>மசோதா<<>> லோக்சபாவில் தாக்கல். *பதவியை பறிக்கும் மசோதாவை கருப்பு மசோதா எனவும், இன்று கருப்பு நாள் என்றும் <<17464824>>CM ஸ்டாலின்<<>> கண்டனம். *<<17463695>>தவெக<<>> மாநாட்டு பணியின் போது, 100 அடி கொடிக்கம்பம் விழுந்து விபத்து. *<<17464229>>கூலி<<>> படத்திற்கு U/A சான்றிதழ் கோரி தாக்கல் செய்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

News August 20, 2025

தமிழகத்தில் 7 மாதங்களில் 850 கொலை: சாடிய EPS

image

திமுக தேய்ந்து கொண்டிருப்பதால் வீட்டின் கதவை தட்டி உறுப்பினர்களை சேர்த்து வருவதாக EPS சாடியுள்ளார். ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 850 கொலைகள் நடந்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் விமர்சித்தார். மேலும், தேர்தல் நெருங்குவதால் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது என்றார்.

error: Content is protected !!