News April 29, 2025
சந்தேகத்தால் சிதைந்த குடும்பம்

வீட்டில் அண்ணன் உள்ளாடையுடன் சுற்றித் திரிந்ததால் சந்தேகத்தில் தம்பி தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். உ.பியின் கோரக்பூரில் தம்பிக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. புதுப்பெண் சரோஜின் சமையலை மாமியார், மைத்துனர் என அனைவரும் பாராட்டியுள்ளனர். இதனை விரும்பாத கணவர் சதீஷ், சரோஜை அழைத்து கண்டித்துள்ளார். பின்னர், சந்தேகத்தில் மனைவியை கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Similar News
News January 7, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 573
▶குறள்:
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். ▶பொருள்: பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.
News January 7, 2026
பாஜக IT செல் APP-ஐ பயன்படுத்தும் ECI: மம்தா

SIR பணிகளை எதிர்த்து வரும் மே.வங்க CM மம்தா பானர்ஜி ECI பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். மே.வங்கத்தில் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்காக, பாஜக IT செல் உருவாக்கிய மொபைல் APP-ஐ ECI சட்டவிரோதமாகப் பயன்படுத்துகிறதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தகுதியான வாக்காளர்களை இறந்தவர்களாகக் காட்டுவது, வயதானவர்கள் நேரில் அழைப்பது என ஜனநாயகத்திற்கு விரோதமாக ECI செயல்படுவதாகவும் மம்தா சாடியுள்ளார்.
News January 7, 2026
திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீர்ப்பை கண்டித்துள்ள CPM

திருப்பரங்குன்றம் <<18776534>>தீர்ப்பு <<>>நீதி பரிபாலன முறை எதிரானது CPM மாநில செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார். புதிதாக ஒரு இடத்தில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை மனுதாரரும் சொல்லவில்லை, கோர்ட் தீர்ப்பிலும் சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டார். TN அரசை குற்றம்சாட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் கோர்ட் செயல்பட்டுள்ளதாகவும், இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


