News November 24, 2024
லட்டு விவகாரத்தில் விடிய விடிய சோதனை

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்ததாக எழுந்த புகாரில் திண்டுக்கல் ஏ.ஆர்.டைரி ஃபுட்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது. அவர்கள் அளித்த நெய்யில்தான் விலங்கு கொழுப்பு இருந்ததாக தேவஸ்தான நிர்வாகம் குற்றம்சாட்டியிருந்தது. இதனையடுத்து, அந்நிறுவனத்தில் 14 மணி நேரமாக நடைபெற்ற உணவுத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவு பெற்றிருக்கிறது.
Similar News
News January 1, 2026
2025-ல் AI செய்த சிறப்பான சம்பவங்கள்

2025-ல் AI, வெறும் சக்திவாய்ந்த தொழில்நுட்பமாக மட்டும் பிரபலமடையவில்லை. உணர்ச்சி, படைப்பாற்றல், நகைச்சுவை, எளிதாக அணுகும்முறை ஆகியவற்றால் டிரெண்டானது. இந்த தொழில்நுட்பம் மனிதத்தன்மை வாய்ந்ததாக உணரப்பட்டது. அந்த வகையில் எதுவெல்லாம் டிரெண்டானது என்று, மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்கள் எதை என்ஜாய் செய்தீங்க? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News January 1, 2026
திமுகவின் அடிமைகளான VCK, கம்யூனிஸ்ட் கட்சிகள்: பாஜக

தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என பல தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழிசை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் திமுக அரசுக்கு எதிராக திருமாவளவனோ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோ குரல் கொடுக்கவில்லை என்றும், அவர்கள் திமுகவின் அடிமைகளாக மாறிவிட்டதாகவும் கடுமையாக சாடியுள்ளார். மேலும் காங்கிரஸில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 1, 2026
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கொடூரன் கைது

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் கர்ப்பமாகும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மேட்டூரில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. மாணவி சற்று மனநலம் குன்றியவர் என்பதால், கூலித் தொழிலாளி சரண் என்பவர் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். தற்போது, போக்சோ சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


