News November 24, 2024
லட்டு விவகாரத்தில் விடிய விடிய சோதனை

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்ததாக எழுந்த புகாரில் திண்டுக்கல் ஏ.ஆர்.டைரி ஃபுட்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது. அவர்கள் அளித்த நெய்யில்தான் விலங்கு கொழுப்பு இருந்ததாக தேவஸ்தான நிர்வாகம் குற்றம்சாட்டியிருந்தது. இதனையடுத்து, அந்நிறுவனத்தில் 14 மணி நேரமாக நடைபெற்ற உணவுத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவு பெற்றிருக்கிறது.
Similar News
News December 13, 2025
தமிழ் நடிகை தற்கொலைக்கு இதுதான் காரணம்

தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்ட சீரியல் நடிகை <<18544425>>ராஜேஸ்வரி<<>>, வீட்டின் குத்தகை தொகை ₹13 லட்சத்தை பயன்படுத்த நினைத்திருக்கிறார். இதற்கு கணவர் சதீஷ் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ராஜேஸ்வரி, அளவுக்கு அதிகமான BP மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது முடியும்?

சமீபத்தில் மதுரை எய்ம்ஸ் பணிகள் பெயரளவிலேயே இருப்பதாக <<18474670>>CM ஸ்டாலின்<<>> விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஹாஸ்பிடலுக்கு இதுவரை ₹421.02 கோடியை விடுவித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பதிலளித்த அவர், நவ.30, 2025 படி, 42% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2026, அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக நிறைவுபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 13, 2025
விஜய்யை விசாரிக்க CBI திட்டம்

கரூரில் 41 பேர் பலியான வழக்கில் CBI அதிகாரிகள் விஜய்யை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே தவெக முக்கிய தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல்குமார், மதியழகனிடம் கரூரில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விஜய்யிடம் விசாரணை நடத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி, கரூருக்கு பதிலாக சென்னையில் வைத்தே விஜய்யிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாம்.


