News March 25, 2024
பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரத் தாய்

பிறந்து 1 மாதமே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூரைச் சேர்ந்த சத்யா என்பவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை மீது அவரது கணவர் ரமேஷ் அதிக பாசம் காட்டியதால், ஆத்திரமடைந்த சத்யா குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றுள்ளார். மேலும், குறை மாத குறை மாத பிரசவம் என்பதால், எதிர்காலத்தில் குழந்தை ஊனமாகிவிடுமோ என்ற அச்சத்தில் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
Similar News
News February 17, 2026
புதுக்கோட்டை: SBI வங்கி வேலை APPLY NOW!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 17, 2026
PM ஆக பதவியேற்கும் தாரிக் ரஹ்மான்.. விழாவில் ஓம் பிர்லா!

வங்கதேசத்தின் புதிய பிரதமராக வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவரும், Ex PM கலீதா ஜியாவின் வாரிசுமான தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்க உள்ளார். தெற்கு பிளாசாவில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், இந்தியா தரப்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் மக்களவையின் GS உத்பல் குமார் சிங் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News February 17, 2026
திமுக MP-யிடம் வேதனைப்பட்ட செங்கோட்டையன்!

துரோகத்தின் மொத்த உருவம் EPS தான் என திமுக MP செல்வகணபதி விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், பார்லிமெண்ட் தேர்தலில், தான் ஜெயிக்க கூடாது என்பதற்காக எந்த செங்கோட்டையன் வீட்டு வாசலில் காத்திருந்தாரோ, அவரையே கட்சியில் இருந்து EPS நீக்கிவிட்டார் என பேசினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் தன்னை தொடர்புகொண்ட KAS, ’மாப்ள என்னையும் குத்திட்டான்யா’ என்று வேதனை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.


