News March 25, 2024
பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரத் தாய்

பிறந்து 1 மாதமே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூரைச் சேர்ந்த சத்யா என்பவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை மீது அவரது கணவர் ரமேஷ் அதிக பாசம் காட்டியதால், ஆத்திரமடைந்த சத்யா குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றுள்ளார். மேலும், குறை மாத குறை மாத பிரசவம் என்பதால், எதிர்காலத்தில் குழந்தை ஊனமாகிவிடுமோ என்ற அச்சத்தில் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
BREAKING: செங்கோட்டையன் அறிவித்தார்.. விஜய் புதிய முடிவு

ஈரோட்டில் வரும் 16-ம் தேதி விஜய்யின் கூட்டத்திற்கு மாற்று ஏற்பாடாக விஜயமங்கலம் டோல்கேட் அருகே 16 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். <<18493694>>முன்னதாக பவளத்தாம்பாளையத்தில்<<>> அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த இடத்திற்கு அனுமதி கேட்டு மற்றொரு கடிதம் வழங்க உள்ளதாகவும் கூறினார். மேலும், விஜய்யின் வருகையால் ஈரோட்டில் மாபெரும் மாற்றம் நிகழும் என்றும் சூளுரைத்தார்.
News December 7, 2025
துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உள்பட 11 பேர் பலி

தெ.ஆப்பிரிக்காவின் நிர்வாக தலைநகரான பிரிட்டோரியா அருகே உள்ள சால்ஸ்வில்லே நகரில், மதுபான விடுதியில் நுழைந்த கும்பல் ஒன்று சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், 3 வயது, 12 வயது என 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வரும் போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
News December 7, 2025
நடிகை சோனாரிகாவிற்கு குழந்தை பிறந்தது ❤️❤️❤️

கெளதம் கார்த்திக்கின் ‘இந்திரஜித்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனாரிகா படோரியா. இவருக்கு, தொழிலதிபர் விகாஸ் பரஷார் உடன் 2024-ல் திருமணம் முடிந்தது. இந்நிலையில், இத்தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மழலை வாசமிக்க பிஞ்சு கால் விரல்களை பிடித்தவாறு சோனாரிகா வெளியிட்ட போட்டோவுக்கு லைக்குகள் குவிகின்றன. மேலும், திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.


