News August 24, 2024

பெற்ற மகளை வன்கொடுமை செய்த கொடூரன்

image

பெற்ற மகளையே தந்தை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையில் அடிபட்டதாக கூறி எழும்பூர் மருத்துவமனையில் 6 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டார். அவரை முழு பரிசோதனை செய்ததில் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியானது. இதனையடுத்து, சிறுமியின் தந்தையான புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ரவியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். சமீபகாலமாக சிறுமிகள் வன்கொடுமையால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

Similar News

News November 27, 2025

நெல்லை: மருத்துவக் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு வருட டிப்ளமோ படிப்பை நெல்லை கிராம புரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பயில்கிறார். இவர் grindr செயலி மூலம் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை தனிமையில் சந்திக்க முத்தூர் பகுதிக்கு சென்றார். அங்கு மறைந்திருந்து 4 பேர், மாணவரை அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு மூலம் ரூ.22 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 27, 2025

ராமதாஸ் கையில் அதிகாரங்கள்: ஸ்ரீகாந்தி

image

பாமக இரண்டாக பிரிந்து கிடப்பதால், இதுவரை கூட்டணியை உறுதி செய்ய முடியவில்லை. இதற்கிடையில், பாமகவின் அனைத்து அதிகாரங்களும் தனக்குதான் இருப்பதாக அன்புமணி கூறி வருகிறார். இந்நிலையில், அன்புமணிக்கு எதிராக அரசியல் களத்தில் குதித்துள்ள ஸ்ரீகாந்தி, பாமக பெயர், சின்னம் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனர் ராமதாஸிடம்தான் உள்ளது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

News November 27, 2025

அழுகிய பழங்களை சாப்பிட்டு.. WC கேப்டனின் சோகம்!

image

கிரிக்கெட் என்றாலே காசு கொழிக்கும் விளையாட்டு என கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். WC-யை வென்ற இந்தியா பெண்கள் பார்வையற்றோர் அணியின் கேப்டன் தீபிகாவின் கருத்துக்கள் நம்மை அதிர வைக்கிறது. அவர் சிறுவயதில் அழுகிய பழங்களின் கெட்ட பாகங்களை நீக்கிவிட்டு மீதியை சாப்பிட்டு வளர்ந்ததாக கூறினார். இது அணியின் அனைத்து வீரர்களும் எதிர்கொண்ட நிலைதான் என்ற அவர், அதில் தற்போதும் பெரிய மாற்றம் இல்லை என தெரிவித்தார்.

error: Content is protected !!