News August 24, 2024

பெற்ற மகளை வன்கொடுமை செய்த கொடூரன்

image

பெற்ற மகளையே தந்தை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையில் அடிபட்டதாக கூறி எழும்பூர் மருத்துவமனையில் 6 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டார். அவரை முழு பரிசோதனை செய்ததில் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியானது. இதனையடுத்து, சிறுமியின் தந்தையான புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ரவியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். சமீபகாலமாக சிறுமிகள் வன்கொடுமையால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

Similar News

News December 1, 2025

சற்றுமுன்: விலை கிடுகிடுவென உயர்வு

image

டிட்வா புயல் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. மழையால் விளைச்சல் பாதிப்பு காரணமாக ஒரு கிலோ கத்தரிக்காய் ₹140, தக்காளி ₹80, வெங்காயம் ₹75, வெண்டைக்காய் ₹80, ஊட்டி கேரட் ₹60 என விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

News December 1, 2025

பாக்., ட்ரோன் தாக்குதல் அதிகரிப்பு: BSF

image

ஆபரேஷன் சிந்துாருக்கு பிறகு, பாக்.,-ல் இருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் வீசும் போக்கு அதிகரித்துள்ளதாக BSF தெரிவித்துள்ளது. 2025-ல் எல்லையை கடந்து வந்த ட்ரோன்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பல்வேறு ரக துப்பாக்கிகள், 3,625 தோட்டாக்கள், 10 கிலோ வெடிபொருட்கள், 12 கையெறி குண்டுகளை கைப்பற்றியுள்ளதாக BSF தெரிவித்துள்ளது. 272 பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

News December 1, 2025

இன்று சமந்தாவுக்கு 2-வது திருமணமா?

image

நடிகை சமந்தாவுக்கு இன்று 2-வது திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குநர் ராஜ் நிடிமொருவை அவர் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருவரும் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, ராஜின் மனைவி, ‘Desperate people does desperate things’ என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளதும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!