News August 24, 2024
பெற்ற மகளை வன்கொடுமை செய்த கொடூரன்

பெற்ற மகளையே தந்தை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையில் அடிபட்டதாக கூறி எழும்பூர் மருத்துவமனையில் 6 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டார். அவரை முழு பரிசோதனை செய்ததில் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியானது. இதனையடுத்து, சிறுமியின் தந்தையான புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ரவியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். சமீபகாலமாக சிறுமிகள் வன்கொடுமையால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
Similar News
News January 7, 2026
கோவை அருகே சோக சம்பவம்!

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்திய சூரஜ் (27). இவர் கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சை பெற்று உடல்நிலை முன்னேற்றம் அடையவில்லை. இதனால் வாழ்க்கை விரக்தி அடைந்து, சத்திய சூரஜ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து செல்வபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 7, 2026
நயினாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி

கரூர் துயரில் <<18762471>>நயினாரின்<<>>
குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என அவர் தெரிவித்துள்ளார். போலீஸ் கூறிய இடத்தில் விஜய்யின் வாகனத்தை நிறுத்தாதது, மாற்றுப்பாதையில் சென்றது பற்றி நயினார் பேசவில்லை என்றும், நடந்தவை குறித்து தெரியாமல் குறுகிய மனப்பான்மையுடன் சொன்ன கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
News January 7, 2026
சேலையில் மிளிரும் ‘சிங்காரி’ ❤️❤️

‘றெக்க மட்டும் இருந்தா என் ஆளு தேவதை மச்சான்’ என்ற வசனத்திற்கு நடிகை மமிதா பைஜூ உயிர் கொடுத்திருக்கிறாரா என தோன்றுகிறது. இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்த ரீசண்ட் போட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். வண்ணச் சேலையில் மின்னும் பூவாய் க்யூட்டான ரியாக்ஷன் கொடுக்கும் ‘விஜய்யின் ரீல் மகள்’ மமிதாவின் போட்டோக்களை மேலே ஸ்வைப் செய்து நீங்களும் பாருங்க!


