News April 15, 2024
துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை துறந்த தம்பதி

குஜராத்தை சேர்ந்த தம்பதி, துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை தானமாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமான நிறுவன அதிபரான பாவேஸ் பண்டாரியும், அவரது மனைவியும் பிப்ரவரி மாதம் 4 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று, சொத்துகளை தானம் அளித்தனர். இந்த மாத இறுதியில் 2 பேரும் ஜைன துறவறம் காணவுள்ளனர். 2022இல் மகளும், மகனும் சிறுவயதில் துறவறம் பூண்டதை பின்பற்றி, இவர்களும் துறவறம் காணவுள்ளனர்.
Similar News
News October 28, 2025
தொப்பையைக் குறைக்க உதவும் உணவுகள்

தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், சரியான உணவுகளைத் தேர்வு செய்வதும் அவசியம். எளிதாக கரையக்கூடிய நார்ச்சத்து, குறைந்த கலோரி கொண்ட உணவுகளை எடுத்துக்கொண்டால் எளிதாக குறைக்கலாம். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த உணவை, கமெண்ட்ல சொல்லுங்க.
News October 28, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு புதிய அப்டேட்

5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய் நிலம் வரை வைத்திருப்பவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள். ஆனால், விண்ணப்பிக்கும்போது நில ஆவண விவரங்கள் கேட்கப்பட்டிருக்காது. இதனால், தங்களுக்கு ₹1,000 கிடைக்குமா என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் அச்சப்பட தேவையில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களுக்கு நவம்பரில் அரசிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளதாம். SHARE IT
News October 28, 2025
BREAKING: கரையை கடக்கத் தொடங்கியது புயல்

மொன்தா புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டிணம் – கலிங்கப்பட்டிணம் இடையே சற்றுநேரத்திற்கு முன்பு கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயல் முழுமையாக கரையை கடக்க 3 – 4 மணி நேரம் ஆகலாம் என IMD கணித்துள்ளது. புயல் எதிரொலியாக ஆந்திரா, ஒடிசா, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.


