News April 15, 2024

துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை துறந்த தம்பதி

image

குஜராத்தை சேர்ந்த தம்பதி, துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை தானமாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமான நிறுவன அதிபரான பாவேஸ் பண்டாரியும், அவரது மனைவியும் பிப்ரவரி மாதம் 4 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று, சொத்துகளை தானம் அளித்தனர். இந்த மாத இறுதியில் 2 பேரும் ஜைன துறவறம் காணவுள்ளனர். 2022இல் மகளும், மகனும் சிறுவயதில் துறவறம் பூண்டதை பின்பற்றி, இவர்களும் துறவறம் காணவுள்ளனர்.

Similar News

News September 18, 2025

ரோபோ சங்கர் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

image

மறைந்த நகைச்சுவை நடிகர் <<17754481>>ரோபோ சங்கர்<<>> மறைவுக்கு முதல் நபராக நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில் ‘தம்பி ரோபோ சங்கர், போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ?’ என வேதனையுடன் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர், கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ரத்த தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.

News September 18, 2025

அறைய சொன்ன KS அழகிரிக்கு கங்கனா பதிலடி

image

ஏர்போர்ட்டில் CRPF வீரர், கங்கனா ரனாவத்தை அறைந்தது குறித்து பேசிய KS அழகிரி, கங்கனா இந்த பக்கம் (தென்னிந்தியா) வந்தால் அவரை அறைந்துவிடுங்கள் என்று காட்டமாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய கங்கனா, இந்தியாவில் யாரும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், யாரும் நம்மை தடுக்க முடியாது என பதிலடி கொடுத்துள்ளார். மேலும், பெண்களுக்கெதிரான அவதூறு கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்ககூடாது என்றும் கூறினார்.

News September 18, 2025

EPS தான் CM வேட்பாளர்: அண்ணாமலை உறுதி

image

தமிழகத்தில் NDA கூட்டணியின் CM வேட்பாளர் EPS தான் என்று அண்ணாமலை உறுதிப்படுத்தியுள்ளார். அமித்ஷா கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், EPS-ஐ CM ஆக்குவதற்கு ஒற்றை நோக்கத்துடன் பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நட்பு ரீதியாக விரைவில் TTV, OPS ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் நலனுக்காக சிலவற்றை பேசவுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

error: Content is protected !!