News April 15, 2024
துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை துறந்த தம்பதி

குஜராத்தை சேர்ந்த தம்பதி, துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை தானமாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமான நிறுவன அதிபரான பாவேஸ் பண்டாரியும், அவரது மனைவியும் பிப்ரவரி மாதம் 4 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று, சொத்துகளை தானம் அளித்தனர். இந்த மாத இறுதியில் 2 பேரும் ஜைன துறவறம் காணவுள்ளனர். 2022இல் மகளும், மகனும் சிறுவயதில் துறவறம் பூண்டதை பின்பற்றி, இவர்களும் துறவறம் காணவுள்ளனர்.
Similar News
News November 24, 2025
தர்மேந்திரா காலமானார்.. PM மோடி உருக்கமான இரங்கல்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான <<18375107>>தர்மேந்திரா<<>> உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு பாலிவுட் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள PM மோடி, இந்திய சினிமாவில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தர்மேந்திரா தனது மாறுபட்ட நடிப்பால் எண்ணற்ற மக்களை கவர்ந்ததாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
News November 24, 2025
பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளன. அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் நன்மை உள்ள நிலையில், பச்சை வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா? *வயிற்று பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் *ஸ்டார்ச் அதிகமாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது *உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உள்ளது *ரத்த ஓட்டம் சீராகும் *பற்கள் தொடர்பான பிரச்னைகளை நீக்குகிறது *ஆன்டி-ஆக்ஸிடண்ட் கண்புரை நோய்களுக்கு உதவுகிறது.
News November 24, 2025
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கனமழை வெளுக்கும்: IMD

வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 3 சுழற்சிகள் நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. இதனால், தென் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களில் அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 29-ம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், வெளியே செல்லும்போது பாதுகாப்பாக இருங்க நண்பர்களே!


