News April 15, 2024
துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை துறந்த தம்பதி

குஜராத்தை சேர்ந்த தம்பதி, துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை தானமாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமான நிறுவன அதிபரான பாவேஸ் பண்டாரியும், அவரது மனைவியும் பிப்ரவரி மாதம் 4 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று, சொத்துகளை தானம் அளித்தனர். இந்த மாத இறுதியில் 2 பேரும் ஜைன துறவறம் காணவுள்ளனர். 2022இல் மகளும், மகனும் சிறுவயதில் துறவறம் பூண்டதை பின்பற்றி, இவர்களும் துறவறம் காணவுள்ளனர்.
Similar News
News October 28, 2025
FLASH: தொடர் ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தைகள்!

நேற்று போல் இன்றும் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. அதன்படி சென்செக்ஸ் 108 புள்ளிகள் உயர்ந்து 84,887 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 26,000 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. HDFC, BHARATHI AIRTEL, SBI உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேநேரம், ICICI, BAJAJ FINANCE, AXIS BANK உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளன.
News October 28, 2025
‘SIR’ என்றாலே திமுகவுக்கு பயம்: நயினார் நாகேந்திரன்

‘SIR’ என்றாலே திமுகவுக்கு பயம் என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நவ.4-ல் தொடங்குகிறது. தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் TN-ல் மேற்கொள்ள கூடாது என திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், திமுகவுக்கு ஆதரவான போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பதால்தான் SIR-யை திமுக எதிர்ப்பதாக நயினார் கூறியுள்ளார்.
News October 28, 2025
ஓய்வு பெறுகிறாரா மெஸ்ஸி?

கால்பந்து உலகின் அரசன் லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், 2026 உலகக்கோப்பையில் விளையாட விரும்புவதாக அவரே தெரிவித்துள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், உடற்தகுதி இருந்தால் மட்டுமே பங்கேற்பேன் எனவும் கூறியுள்ளார். தற்போது அவர் இன்டர் மியாமி அணி சார்பாக கிளப் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


