News April 15, 2024

துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை துறந்த தம்பதி

image

குஜராத்தை சேர்ந்த தம்பதி, துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை தானமாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமான நிறுவன அதிபரான பாவேஸ் பண்டாரியும், அவரது மனைவியும் பிப்ரவரி மாதம் 4 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று, சொத்துகளை தானம் அளித்தனர். இந்த மாத இறுதியில் 2 பேரும் ஜைன துறவறம் காணவுள்ளனர். 2022இல் மகளும், மகனும் சிறுவயதில் துறவறம் பூண்டதை பின்பற்றி, இவர்களும் துறவறம் காணவுள்ளனர்.

Similar News

News August 21, 2025

YO-YO-க்கு பதில் BRONCO: பிசிசிஐயின் புதிய திட்டம்

image

இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்த பிசிசிஐ புதிய பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அணி தேர்வுக்கு முன்பாக BRONCO சோதனையை வீரர்கள் மேற்கொள்ள வேண்டும். இதில் 1,200 மீ தூரத்தை ஐந்து செட்களாக 20மீ, 40மீ, 60மீ என தனித்தனியே ஓய்வின்றி 6 நிமிடங்களுக்குள் ஓட வேண்டும். இந்த BRONCO TEST ரக்பி விளையாட்டுடன் தொடர்புடையது. இதுவரை அணி தேர்வுக்கு YO-YO Test பின்பற்றப்படுகிறது.

News August 21, 2025

உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ்

image

‘வைகை கரை காற்றே நில்லு’ என்ற பாடல் இன்றும் பஸ்களில் ஒலித்துக் கொண்டிருக்க, நம்மை அறியாமலே நாம் தாளம் போட்டு நினைவுகளால் உருகுகிறோம். அந்த அளவு தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘உயிருள்ளவரை உஷா’ படம் 4K தொழில்நுட்பத்தில் செப்டம்பரில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக அதன் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரீ ரிலீஸ் வரிசையில் ரெட்ரோ வகை படமும் தற்போது இணைந்துள்ளது.

News August 21, 2025

தவெக மாநாட்டில் மோர் குடிப்பவர்களே அலர்ட்

image

மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டில், உணவு விற்பனை படு ஜோராக நடந்துவருகிறது. குறிப்பாக தயிர், தக்காளி சாதம் ₹70- ₹80, வெஜ் பிரியாணி ₹100, கூழ் ₹50, தண்ணீர் பாட்டில் ₹40, கரும்பு ஜூஸ் ₹30, சாத்துக்குடி ஜூஸ் ₹50, ஐஸ்கிரீம் ₹70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் என்ன கொடுமை என்றால், இலவசமாக கொடுப்பது போல மோரை கொடுத்து, ஒரு டம்ளர் ₹50 என சிலர் அடாவடியாக பணம் வசூல் செய்கின்றனராம்.

error: Content is protected !!