News June 18, 2024
3 தலைநகரம் கொண்ட நாடு

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள செல்வ செழிப்பான நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாகும். அந்த நாடு, உலகிலேயே அதிகபட்சமாக 3 தலைநகரங்களை கொண்ட நாடாக உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நிர்வாக வசதி சரிசமமாக பிரிந்திருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்த நாட்டின் தலைநகரங்களாக பிரிட்டோரியா, கேப்டவுன், புளூம்பொன்டின் ஆகிய நகரங்கள் செயல்படுகின்றன.
Similar News
News March 13, 2026
திமுகவுக்காக முதல்முறை களத்தில் OPS

தென்மாவட்டங்களில் இன்று முதல் திமுகவுக்காக OPS தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் அவர் இன்று பரப்புரை மேற்கொள்கிறார். திமுகவில் இணைந்தபிறகு, அக்கட்சிக்காக முதல்முறையாக OPS வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளது கவனம் பெற்றுள்ளது. OPS-ஐக் கொண்டு தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூக வாக்குகளை பெற திமுக திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News March 13, 2026
ஒரே இரவில் மாற்றம்.. அதிமுக கூட்டணியில் இணைந்தார்

தென்மாவட்ட அரசியலில் செல்வாக்குள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. 90-களில் திமுக, அதிமுகவுக்கு எதிராக உருவெடுத்த டாக்டர் சேதுராமனுக்கு, தென்மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. நேற்று இரவு EPS-ஐ நேரில் சந்தித்த சேதுராமன், 2026 தேர்தலில் அதிமுகவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
நெருங்கும் தேர்தல்.. திமுக முக்கிய முன்னெடுப்பு

மார்ச் 15-ல் திமுக மா.செ.,க்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொ.செ., துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் அதே நாளில் பேரவை <<19359637>>தேர்தல் தேதி<<>> அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால், தேர்தல் பணிகளை விரைவுபடுத்தவும், பரப்புரை திட்டங்களை வகுக்கவும் ஸ்டாலின் அறிவுறுத்துவார் என கூறப்படுகிறது.


