News February 24, 2025
நகல் என்றுமே அசல் ஆக முடியாது: அண்ணாமலை

TNல் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில், 1000 முதல்வர் மருந்தகங்களை CM ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை TN அரசு காப்பியடித்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். அத்துடன், நகல் என்றுமே அசல் ஆக முடியாது என முதல்வர் மருந்தகம் குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ள அவர், தேர்வில் காப்பி அடிப்பது போன்ற மீம்ஸையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Similar News
News February 24, 2025
10 மாவட்டங்களில் சிறுமிகளை பாதுகாக்க அரசு அசத்தல்

சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் நலன் & சிறப்பு சேவைகள் துறையின் கீழ், குழந்தைகளின் உளவியல், மனநலம், கல்வி உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்த குமரி, கடலூர், கோவை, ஈரோடு, தேனி, வேலூர், தி.மலை உள்பட 10 மாவட்டங்களில் மதிப்பூதிய அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படுவர். இதற்கான தகுதி, விண்ணப்பிக்கும் முறைக்கு <
News February 24, 2025
ஜியோ கிரிக்கெட் டேட்டா பேக்: 90 நாட்களுக்கு இலவசம்!

கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஒரு புதிய பேக்கை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. ஜியோ சினிமா, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆகிய இரு நிறுவனங்களும் ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ என்ற பெயரில் அண்மையில் ஒரே நிறுவனமாக இணைந்துள்ளன. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் தொடர் இரண்டையும் நேரடியாக காணும் வகையில் ரூ.195-க்கான புதிய பேக் அறிமுகம் செய்துள்ளது. இதில் 90 நாள்களுக்கு ஜியோஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன், 15GB டேட்டாவும் கிடைக்கும்.
News February 24, 2025
இந்தி எதிர்ப்பில் திமுக நாடகம்

பல இடங்களில் இந்தியில் இருக்கும் எழுத்துக்களை அழித்து திமுகவினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தி எதிர்ப்பு என்று திமுகவினர் நாடகம் நடத்தி வருவதாக விமர்சித்த அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் வாரிசுகள் 3 மொழிகள் கற்பிக்கப்படும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பினார்.