News August 6, 2024

நெல்லையில் 22 ஆண்டுக்குப் பின் கைது

image

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள SBI வங்கி கிளையில், ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் குற்றவாளி என ஸ்ரீ சலபதி ராவ் என்பவரை கடந்த 2002 ஆம் ஆண்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது. அன்றிலிருந்து தலைமறைவாக இருந்த சலபதிராவை, CBI போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நெல்லை சுத்தமல்லி பகுதி வீட்டில் சலபதிராவ் வாடகைக்கு தங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, இன்று(ஆக.,6) அவரை CBI அதிகாரிகள் கைது செய்தனர்.

Similar News

News January 15, 2026

நெல்லை: இலவச GAS அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

நெல்லை மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

நெல்லை : இ-ஸ்கூட்டர் ரூ. 20,000 மானியம் – APPLY NOW!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 15, 2026

நெல்லை: கம்பால் தாக்கிய நபர் கைது

image

நெல்லை டவுன் தமிழ் சங்கம் தெருவைச் சேர்ந்தவர் பீர் முகமது. இவருக்கும், மேலகருங்குளம் சிவாஜி நகரை சேர்ந்த செல்லப்பாவிற்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்லப்பா இரும்பு கம்பியால் பீர்முகமதுவை தாக்கினார். இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பாவை கைது செய்தனர்.

error: Content is protected !!