News April 4, 2024
ஆடுகளை தத்தெடுக்க அழைக்கும் நகரம்

காட்டு ஆடுகளின் எண்ணிக்கை பெருகி வருவதால், அவற்றை தத்தெடுக்க வருமாறு இத்தாலிய தீவு நகரமான அலிகுடி (Alicudi) மேயர் ரிக்கார்டோ குல்லோ மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 5 சதுர கி.மீ தொலைவு கொண்ட தீவில், 100 மக்களுக்கு, 6 மடங்கு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மனிதர்களுடன் அமைதியாக வாழ்ந்தாலும், தாவரங்கள், பூங்காக்கள் மற்றும் வீடுகளுக்கு ஆடுகள் அதிக சேதங்களை விளைவிக்கின்றதாம்.
Similar News
News January 1, 2026
தொகுதி மாறுகிறாரா நயினார்?

நெல்லை தொகுதியில் சிட்டிங் MLA-வாக இருக்கும் நயினார் நாகேந்திரன், வரும் தேர்தலில் வேறு தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் பாஜக எடுத்த சர்வேயில், தொகுதியிலுள்ள பட்டியலினத்தவர், நாடார் & யாதவ சமூகத்தினரிடையே அதிருப்தி நிலவுவது தெரியவந்துள்ளதே இதற்கு காரணம் எனப் பேசப்படுகிறது. இதற்கு பதிலாக, விருதுநகரின் சாத்தூரில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
News January 1, 2026
BREAKING: பொங்கல் பரிசு.. வந்தது புதிய அப்டேட்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் தயார் நிலையில் இருப்பதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு 2 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு, வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளன. இன்று (அ) நாளை ரொக்கம் குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட உள்ளதாகவும், அதன் பிறகு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News January 1, 2026
ஹேங்கோவர் ஆகிட்டீங்களா? இதை பண்ணுங்க

புத்தாண்டு கொண்டாட்டத்தில் எவ்வளவு குடிக்கிறோம் என்ற அளவு தெரியாமல் குடித்துவிட்டு பலர் ஹேங்கோவர் ஆகியிருப்பாங்க. இதன் காரணமாக தலைவலி, குமட்டல், அஜீரணம், சோம்பல், வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம். ஏலக்காய், இஞ்சி டீ குடித்தால் ஹேங்கோவரில் இருந்து விடுபடலாம். அதேபோல, எலுமிச்சை சாறுடன், மோர் கலந்து குடித்தால் குமட்டல் நிற்கும். அதிக தண்ணீர் குடிப்பதும், பழங்கள் சாப்பிடுவதும் பலன் தரும். SHARE IT.


