News March 7, 2025
தந்தையின் ஈகோவுக்கு பலியான பிஞ்சுக் குழந்தை!

உ.பி.யைச் சேர்ந்த மோகித் என்பவருக்கும், அவரது அண்டை வீட்டுக்காரரான ராமு என்பவருக்கும் சமீபத்தில் சண்டை ஏற்பட்டது. ஆனால், மோகித்தின் 5 வயது மகளான தானி, எப்போதும் போல ராமுவின் வீட்டுக்கு சென்று விளையாடி வந்திருக்கிறாள். பலமுறை சொல்லியும் மகள் கேட்காததால் ஆத்திரமடைந்த மோகித், குழந்தை தானியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை 4 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார். தற்போது மோகித் சிறையில் உள்ளார்.
Similar News
News March 7, 2025
CT FINAL: நடுவர்கள் அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, AUSஐ சேர்ந்த பால் ரெஃபில் மற்றும் ENGஐ சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாக இருப்பர். இலங்கைச் சேர்ந்த ரஞ்சன் மதுகல்லே போட்டி நடுவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 3rd Umpire ஆக ஜோயல் வில்சனும், 4th Umpire ஆக குமார் தர்மசேனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News March 7, 2025
தீவிரவாதியை இந்தியாவிற்கு நாடு கடத்துவதில் சிக்கல்?

மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ராணா, USA சுப்ரீம் கோர்ட்டில், அவசர மேல்முறையீடு செய்துள்ளான். தான் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டால், முன்னாள் ராணுவ அதிகாரி என்ற காரணத்தால், அதீத சித்ரவதை, மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், எனவே நாடு கடத்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளான். கோர்ட் இந்த மனுவை பதிவு செய்துள்ள நிலையில், விசாரணை தேதியை இன்னும் ஒதுக்கவில்லை.
News March 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 199 ▶குறள்: பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். ▶பொருள்: அரும்பயன்களை ஆராய்ந்து மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.