News April 3, 2024
ரோஹித் மீண்டும் கேப்டனாக வாய்ப்பு?

தொடர் தோல்வியையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் ஷர்மா மீண்டும் கேப்டனாகலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். ஆனால், மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், கேப்டன் பொறுப்பை மீண்டும் ரோஹித்திடம் வழங்க நிர்வாகம் தயங்காது என்று திவாரி கூறியிருக்கிறார்.
Similar News
News January 19, 2026
வாக்காளர் பட்டியல்: ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு

TN-ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 30-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து ECI அறிவித்துள்ளது. SIR பணிகளில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், அவர்களின் மேல்முறையீடு, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று வரை 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.
News January 19, 2026
மிகப்பெரிய ஸ்டாருடன் எப்படி போட்டி போடுவீர்கள்.. சுதா

விஜய் ரசிகர்களை <<18852101>>ரவுடிகள் <<>>என கூறியதற்கு சுதா கொங்கரா கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்நிலையில், தான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை, நாட்டின் மிகப்பெரிய ஸ்டாருடன் எப்படி போட்டி போட முடியும் என்று விளக்கமளித்துள்ளார். மேலும், ஜன நாயகன் வெளியீட்டுக்கு 2 நாள்கள் மட்டும் இருக்கையில், சென்சார் போர்டு செய்தது தவறு என்றும், எந்த படத்திற்கும் அவ்வாறு நடக்கக்கூடாது எனவும் கூறினார்.
News January 19, 2026
FLASH: தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதியாகிறது!

அதிமுக – பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் வரும் 22-ம் தேதி கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இருகட்சி தலைவர்களும் டெல்லி, சென்னை என பயணித்து ஆலோசனைகளை நடத்தி முடித்துவிட்டனர். வரும் 23-ம் தேதி மதுராந்தகத்தில் PM மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் NDA-ல் இடம் பெறும் கூட்டணி கட்சித் தலைவர்களையும் மேடையேற்ற, பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.


