News October 19, 2025
பிரபலம் காலமானார்! கண்ணீர் அஞ்சலி

நோபல் பரிசு வென்ற உலக புகழ் பெற்ற இயற்பியலாளர் சென் நிங் யாங்(103) காலமானார். சீனாவை சேர்ந்த இவர், தனது Particle physics ஆய்வுக்காக 1957-ல் நோபல் பரிசை வென்றிருந்தார். 1964-ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற போதிலும், சீன கலாச்சாரத்தின் மீது கொண்ட பற்றால், 2015-ல் அதனை துறந்து மீண்டும் சீனாவுக்கு குடிபெயர்ந்தார். இவரது மரணம் இயற்பியல் துறைக்கு பெரிய இழப்பு என விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News October 19, 2025
20 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

மஞ்சள் அலர்ட்டால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை, செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், காஞ்சி, குமரி, மதுரை, நாகை, புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், தி.மலை, விருதுநகரில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், தீபாவளி ஷாப்பிங் சென்றவர்கள் கவனமுடன் வீடு திரும்புங்க!
News October 19, 2025
நெல் கொள்முதலில் திமுக மீண்டும் நாடகம்: EPS

பருவமழைக்கு முன்பாக நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், திமுக அரசு காதில் வாங்கவில்லை என்று EPS விமர்சித்துள்ளார். நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடும் ஸ்டாலின் அரசின் மோசமான நிர்வாகத்தால் டெல்டா விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளியாகவே உள்ளது என்றும் சாடியுள்ளார். மேலும், 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் EPS, அரசை வலியுறுத்தியுள்ளார்.
News October 19, 2025
இந்தியாவின் முதல் Antibiotic மருந்து!

சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பயன்படும் ‘Nafithromycin’ என்ற Antibiotic, முதல் முறையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இது, புற்றுநோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மருந்தை Wockhardt என்ற தனியார் மருந்து நிறுவனத்துடன் இணைந்து, அரசின் BIRAC ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கியுள்ளது.