News October 20, 2024
ரயிலை கவிழ்க்க சதி என வழக்குப்பதிவு

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில் ரயிலை கவிழ்க்க சதி என்ற புதிய சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் விபத்து சம்பவத்திற்கு, லூப் லைன் சந்திப்பில் போல்ட், நட் கழற்றப்பட்டதே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Similar News
News July 5, 2025
தனிமையில் வாட வேண்டாமே…

போன் நோண்டவே டைம் பத்தாத இன்றைய இளம் ஜெனரேஷன், தனிமையில் தான் வாடுகின்றது. நேரடி பந்தபாசம் கிடைக்காமல் தனிமையில் தவிப்பதால், இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரமும் 100 பேர் இறப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கொஞ்சம் டைம் ஒதுக்கி நண்பர்களுடன் நேரில் சென்று பேசி சிரித்து மகிழுங்கள். வீட்டிலும் அன்பு பாராட்டுங்கள். ஸ்ட்ரெஸ்லாம் ஓடிப் போய்விடும். இதற்கு முதலில் போனை கொஞ்ச நேரம் தூரம் வையுங்க!
News July 5, 2025
பாமக தலைமை நிர்வாகக் குழு கலைப்பு!

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவைக் கலைத்து புதிய குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி, திலகபாமா, கே.பாலு, வெங்கடேஸ்வரன் தலைமையிலிருந்த தலைமைக் குழுவைக் கலைத்துவிட்டு, அன்புமணி, ஜி.கே.மணி, அருள், முரளி சங்கர், கரூர் பாஸ்கர், பரந்தாமன், தீரன், பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு யார் தலைவர் என்பதில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது.
News July 5, 2025
காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்

மதுரை மேலூர் அருகே இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர் தீபன் ராஜ் தனது காதலியான 19 வயது பெண்ணை தனிமையில் அழைத்துவிட்டு நெருக்கமாக இருந்துள்ளார். இதனையடுத்து, தீபன் ராஜின் உதவியுடன் அவரது நண்பர்களான மதன், திருமாறன் ஆகியோர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.