News August 11, 2024
நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கா?: அன்புமணி

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய அவரது மனைவி, குழந்தை உள்பட 1500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். CBI விசாரணை கோரி போராடியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார அத்துமீறல் எனவும், இது காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வழக்கை திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 24, 2025
இது தெரியாமல் Loan வாங்காதீங்க..

சொந்த வீடு கட்ட வங்கியில் Home Loan வாங்க திட்டங்கள் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு சாதகமாக, 2025-ல் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.50%லிருந்து 5.50%-ஆக குறைத்ததால், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களும் குறைந்துள்ளன. அதன்படி, Home Loan-க்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். SHARE.
News November 24, 2025
இனி 2.30 மணி நேரத்தில் சென்னை TO ஹைதராபாத்!

சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு செல்ல 12 மணி நேரமாவதால், நேர விரயம், பயண களைப்பு என தவிக்கும் மக்களுக்கு ஒரு குட் நியூஸ். இனி 2.30 மணி நேரத்தில் ஹைதராபாத் செல்லலாம் என்ற நம்ப முடிகிறதா? ஆம், சென்னை – ஹைதராபாத் இடையேயான 778 கி.மீ., புல்லட் ரயில் திட்டத்தின் அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு TN அரசு ஒப்புதல் வழங்கினால், இம்மாத இறுதிக்குள் DPR இறுதி செய்யப்படும்.
News November 24, 2025
திமுக உடன் கூட்டணி முறிவு.. ஏன்?

சிறிய கட்சிகளை மதிக்காததால் தான் திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக ஃபார்வர்டு பிளாக் கதிரவன் விளக்கமளித்துள்ளார். திமுக பெரிய கட்சிகளையும் பணத்தை வைத்து அடிமைப்படுத்துவதாக கூறிய அவர், பணத்தால் எதையும் சாதிக்கலாம் என நினைக்கும் கார்ப்பரேட் கம்பெனியாக அக்கட்சி மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும், 2021 தேர்தலில் கட்டாயப்படுத்தி சூரியன் சின்னத்தில் நிற்கவைத்ததாகவும் கூறியுள்ளார்.


