News August 11, 2024

நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கா?: அன்புமணி

image

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய அவரது மனைவி, குழந்தை உள்பட 1500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். CBI விசாரணை கோரி போராடியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார அத்துமீறல் எனவும், இது காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வழக்கை திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News December 3, 2025

வணிகர்கள் 4 மாதங்கள் ₹500 கட்டணமின்றி பதிவு செய்யலாம்

image

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் கட்டணமில்லா நிரந்த உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026 மார்ச் 31-ம் தேதி வரை, நிரந்தர உறுப்பினராவதற்கு ₹500 கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. GST சட்டத்தில் பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாமல், வருடத்திற்கு ₹40 லட்சம் வரை விற்றுமுதல் அளவு (Turn Over) வியாபாரம் செய்யும் வணிகர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

News December 3, 2025

மொபைல் APP சர்ச்சை.. திரும்ப பெற்ற மத்திய அரசு

image

மொபைல் நிறுவனங்கள் ‘Sanchar Saathi’ செயலியை கட்டாயமாக Preload செய்ய வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. நாடு முழுவதும் இந்த செயலியை டவுன்லோடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, <<18447303>>‘Sanchar Saathi’<<>> செயலி மூலம் மக்களை மத்திய அரசு வேவு பார்க்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருந்தன.

News December 3, 2025

PM மோடி டீ விற்கும் AI வீடியோ.. சர்ச்சையில் காங்கிரஸ்

image

காங்., நிர்வாகி ராகினி நாயக் பகிர்ந்த AI வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவப்பு கம்பளத்தில் நடந்தவாறு PM மோடி டீ விற்பது போன்று அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதை கடுமையாக கண்டித்துள்ள பாஜக, உயர் வர்க்க காங்கிரஸ்காரர்களுக்கு OBC பிரிவில் இருந்து கடுமையாக உழைத்து முன்னேறிய தலைவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், பிரதமரின் பின்னனி குறித்து இதுவரை 150 முறை அவமதித்துள்ளதாகவும் சாடியுள்ளது.

error: Content is protected !!