News August 11, 2024
நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கா?: அன்புமணி

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய அவரது மனைவி, குழந்தை உள்பட 1500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். CBI விசாரணை கோரி போராடியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார அத்துமீறல் எனவும், இது காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வழக்கை திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 5, 2025
இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்த கேலக்ஸி!

பரந்து விரிந்த வான்வெளியில் உள்ள ரகசியங்கள் ஏராளம். அந்தவகையில், இந்திய விஞ்ஞானிகள் Milkyway கேலக்ஸியை போலவே ஒரு புதிய சுழல் விண்மீன் கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். பிரபஞ்சம் உருவான பெருவெடிப்பு நிகழ்ந்து, 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் இது உருவாகியுள்ளது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட இதற்கு, இந்திய நதியான Alaknanda-வின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
News December 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News December 5, 2025
US போல் இந்தியாவிற்கு உரிமை உள்ளது: புடின்

அமெரிக்கா தங்களிடம் யுரேனியத்தை வாங்கிக் கொண்டே, இந்தியாவை கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று கூறுவதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட அமெரிக்காவிற்கு உரிமை இருப்பது போல், இந்தியாவிற்கும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உலக எரிவாயு சந்தையில் இந்தியா வளர்ந்து வருவதை, சில ஆதிக்க நாடுகள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.


