News August 11, 2024

நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கா?: அன்புமணி

image

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய அவரது மனைவி, குழந்தை உள்பட 1500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். CBI விசாரணை கோரி போராடியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார அத்துமீறல் எனவும், இது காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வழக்கை திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News December 5, 2025

ராசி பலன்கள் (05.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News December 5, 2025

பிரம்மாண்டமாக பிரகாசிக்கும் கடைசி முழுநிலவு

image

2025-ம் ஆண்டின் கடைசி முழுநிலவு உலகம் முழுவதும் காணப்பட்டு வருகிறது. பூமிக்கு மிக அருகில் வருவதால், வழக்கமான முழுநிலவை விட பிரம்மாண்டமாக பிரகாசித்து வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களும், தங்களது போன்களில் போட்டோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதன்பிறகு 2042 வரை இவ்வளவு நெருக்கமாக நிலவை பார்க்க முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

News December 5, 2025

நயினார் கைதால் ஆக்ரோஷமடைந்த EPS

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை கைது செய்தது கண்டத்திற்குரியது என EPS சாடியுள்ளார். தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக திமுக குளிர்காயத் துடிப்பது தெள்ளத்தெளிவாகிறது என்றும், சில அதிகாரிகளும் இத்தகைய கோர்ட் அவமதிப்பு செயல்களுக்கு துணைபோவது வருத்தமளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அராஜகப் போக்கை கைவிட்டு கோர்ட் உத்தரவை நிறைவேற்றவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!