News August 11, 2024
நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கா?: அன்புமணி

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய அவரது மனைவி, குழந்தை உள்பட 1500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். CBI விசாரணை கோரி போராடியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார அத்துமீறல் எனவும், இது காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வழக்கை திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 28, 2025
‘மொன்தா’ பெயரின் அர்த்தம் தெரியுமா?

இன்று தமிழகம், ஆந்திராவை அதிர வைத்துள்ள ‘மொன்தா’ புயலின் பெயர் காரணம் தெரியுமா? இப்பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது. தாய்லாந்து மொழியில் ‘மொன்தா’ என்றால், ‘மணமிக்க மலர்’ அல்லது ‘அழகான பூ’ என பொருள் பெறுகிறது. மேலும், மென்மை, அழகு & இயற்கையின் மணத்தை குறிக்கவும் தாய்லாந்து மொழியில் ‘மொன்தா’ குறிப்பிடப்படுகிறது. எனவே, இயற்கையின் அழகையும், மழையின் நறுமணத்தையும் ‘மொன்தா’ பிரதிபலிக்கிறது.
News October 28, 2025
இந்தியாவின் டாப் 5 பணக்கார கோயில்கள்!

இந்தியாவில் துட்டு கொட்டோ கொட்டு’னு கொட்டும் கோயில் திருப்பதி என அனைவரும் அறிவோம். ஆனால், திருப்பதியை போலவே நாட்டின் பணக்கார கோயில்கள் லிஸ்ட் உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அந்த லிஸ்ட்டை பார்க்கவும். இவற்றில் எந்தெந்த கோயில்களில் நீங்க தரிசனம் செஞ்சிருக்கீங்க?
News October 28, 2025
வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த USA

அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கிரீன் கார்டு வைத்திருக்கும் வெளிநாட்டினர் உள்பட அனைவரும் நாட்டிற்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் facial recognition மற்றும் பயோமெட்ரிக் சோதனைக்கு உட்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் வைத்திருப்பவர்களை கண்டறிய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


