News May 28, 2024
கார் விபத்து வாழ்க்கையை மாற்றிவிட்டது

கார் விபத்து அனுபவம் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். 2022இல் விபத்தில் சிக்கிய பண்ட், அதிலிருந்து மீண்டு தற்போது டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் பழைய நிகழ்வை நினைவுகூர்ந்த அவர், கடவுளின் கருணையால் உயிரோடு இருப்பதாகவும், விபத்துக்கு பிறகு 7 மாதங்கள் வரை வலி தாங்காமல் அவதிப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
ஸ்டாலின் TAX.. நேரடியாக அட்டாக் செய்த விஜய்

நிதி சார்ந்த பல <<19322121>>வாக்குறுதிகளை<<>> விஜய் வெளியிட்டார். அப்போது, ஸ்டாலினால் செய்ய முடியாததை நீ எப்படி செய்வாய் என கேட்கிறீர்களா எனக் கேட்டு அதற்கு பதிலும் அளித்தார். அதில், பட்ஜெட் நிதியில் 20% ஸ்டாலினுக்கு செல்வதாகவும், 10% அமைச்சர்களுக்கு செல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அரசுக்குத்தான் வரி கொடுப்போம்; அரசே ஒருவருக்கு வரி கொடுப்பதை ஸ்டாலின் TAX என்று தானே சொல்ல வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.
News March 7, 2026
கட்சி மாறியது ஏன்? OPS

கட்சிக்கு விசுவாசமாக இருந்த தன்னை EPS திட்டமிட்டு வெளியேற்றிவிட்டதாக OPS குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுகவை வஞ்சகமாக EPS அபகரித்துக் கொண்டதாகவும் சாடியுள்ளார். ஆனால், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்பதற்கு இலக்கணமாக, தன்னை ஸ்டாலின் திமுகவில் இணைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
சுந்தர் பிச்சைக்கு ₹6,361 கோடி சம்பளம்!

கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு $692 மில்லியன் (₹6,361 கோடி) சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் CEO-க்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார். 2004-ல் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை 2015-ல் CEO ஆக பதவியேற்றார். அதன்பிறகு கூகுள் சந்தை மதிப்பு 7 மடங்கு உயர்ந்தது. தற்போது AI தொழில்நுட்ப போட்டியிலும் கூகுள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.


