News April 2, 2024

கொடூரமான ஆளுநரை திணித்துள்ளனர்

image

பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதோ என்பதுபோல பாஜகவை பற்றி மக்கள் எண்ணுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளதாக சாடினார். மேலும், பேரிடரின் போது உதவி கேட்டால் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Similar News

News August 16, 2025

அமைச்சர் ஐ.பெரியசாமி கைதாக வாய்ப்பு?

image

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் காலையில் இருந்து ED சோதனை செய்து வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக கிடைத்த பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் ED அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே இதுபோன்ற வழக்குகளில், அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி & பொன்முடியை ED கைது செய்தது. தற்போது ஐபி மீதும் கைது நடவடிக்கை பாயும் என்று தகவல் கசிந்துள்ளது.

News August 16, 2025

பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்: CM ஸ்டாலின்

image

தமிழகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதாக கவர்னர் R.N.ரவி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் குற்றங்கள் மற்றும் குற்றச்செயல்கள் குறைந்து வருவதுடன், பெண்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News August 16, 2025

ராஜஸ்தான் பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம்

image

மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாகவும், சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தானில் Pre-KG, LKG, UKG வகுப்புகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாம். இதற்கு NCERT மற்றும் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இது நடைமுறைக்கு வரும். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!