News April 15, 2024
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மரணம்

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் லோகேஷ், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. விதிஷா கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில், கடந்த 12ஆம் தேதி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். 60 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் சிக்கிய அவனை மீட்க சுமார் 40 மணி நேரத்திற்கு மேலாக மாநில பேரிடர் அவசர மீட்புப் படையினர் முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது.
Similar News
News November 28, 2025
திமுகவில் இணைய முயலவில்லை: மல்லை சத்யா

திமுகவில் இணையவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கான முயற்சியை எடுக்கவில்லை என மல்லை சத்யா கூறியுள்ளார். இதற்கான காரணத்தை கூறிய அவர், திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதால் அவர்களுக்கு எந்த குளறுபடியும் வந்துவிடக்கூடாது என கருதியதாக தெரிவித்துள்ளார். அதேநேரம், திராவிட கொள்கைக்கு எதிரான கட்சிகளுடனும், பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியிலும், சேரும் திட்டமில்லை எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
News November 28, 2025
2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் லீவு!

‘டிட்வா’ புயல் எதிரொலியால் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.28) அரைநாள்(மதியம்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
₹40,000 சம்பளத்தில் வேலை.. APPLY NOW!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: B.E/B.Tech, B.Pharm. வயது வரம்பு: 40. தேர்வு முறை: Written Test, Interview, Document Verification. சம்பளம்: ₹42,478. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.25. விருப்பமுள்ளவர்கள் <


