News April 15, 2024
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மரணம்

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் லோகேஷ், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. விதிஷா கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில், கடந்த 12ஆம் தேதி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். 60 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் சிக்கிய அவனை மீட்க சுமார் 40 மணி நேரத்திற்கு மேலாக மாநில பேரிடர் அவசர மீட்புப் படையினர் முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது.
Similar News
News December 7, 2025
மேலூர் அருகே 34 பேர் கைது

ஒத்தக்கடை எஸ்ஐ ஜெயம் பாண்டியன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மதுரை மேலூர் சாலையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக சிலர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். குருசாமி(69) சிவ காமு(68), பிரகாஷ்(38) உட்பட 34 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலை விடுவித்தனர்.
News December 7, 2025
வட மாவட்டங்களில் திமுகவின் மாஸ்டர் மூவ்!

விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாமகவின் வாக்குகளை குறிவைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. வன்னியர்களுக்கு திமுகவில் முக்கியத்துவம் இல்லை என பேசி வரும் அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், அந்த சமூகத்தை சேர்ந்த அமைச்சர் சிவசங்கர், லட்சுமணன் உள்ளிட்டோருக்கு மா.செ., பதவி வழங்கியதன் மூலம் கணிசமாக வாக்குகள் கிடைக்கும் என தலைமை நம்புகிறதாம்.
News December 7, 2025
2027 WC-ல் Ro-Ko இடம் பெறுவார்களா? கம்பீர் பதில்

2027 WC-ல் Ro-Ko ஜோடி விளையாடுவார்களா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க BCCI முனைவதாக கூறப்படும் சூழலில், கோச் கம்பீரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 2027 WC-க்கு 2 ஆண்டுகள் இருப்பதாக கூறிய அவர், தற்போதைய அணி குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார். மேலும், இளம் வீரர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வதாகவும் கூறினார்.


