News April 15, 2024
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மரணம்

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் லோகேஷ், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. விதிஷா கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில், கடந்த 12ஆம் தேதி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். 60 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் சிக்கிய அவனை மீட்க சுமார் 40 மணி நேரத்திற்கு மேலாக மாநில பேரிடர் அவசர மீட்புப் படையினர் முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது.
Similar News
News November 25, 2025
உங்களுக்குள் இருக்கும் ராமரை தட்டி எழுப்புங்கள்: PM மோடி

2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவேண்டுமென்றால் நமக்குள் இருக்கும் ராமரை தட்டி எழுப்ப வேண்டும் என PM மோடி அறிவுறுத்தியுள்ளார். அயோத்தியில் <<18383307>>கொடி ஏற்றி<<>>ய பின் பேசிய அவர், அதீத பக்தி உணர்வு மூலமாகவே ராமர் நம்மை தொடர்புகொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், நாம் ராமரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவரை புரிந்து கொண்டு, அவரை உள்வாங்கி அதன்படி நடக்க வேண்டும் என்றும் PM வலியுறுத்தியுள்ளார்.
News November 25, 2025
முன்னாள் MP, MLA-க்களுடன் ஆலோசனையில் KAS

கொங்கு மண்டலத்தில் உள்ள முன்னாள் MP, MLA-க்கள் உடன் கடந்த இரண்டு நாள்களாக செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 2 நாள்களில் தவெகவில் இணைவார் என்று பேச்சு அடிபட்டு வரும் நிலையில், இபிஎஸ், வேலுமணி மீது அதிருப்தியில் உள்ள மூத்த நிர்வாகிகள் உடன் அவர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம். பெரும் படையுடன் KAS தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News November 25, 2025
இந்த மெசேஜை நம்பாதீங்க.. ரசிகர்களை எச்சரித்த ரகுல்!

Whatsapp-ல் தனது பெயரில் வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் என நடிகை ரகுல் ப்ரீத் சிங் எச்சரித்துள்ளார். இது குறித்து அவரின் X தள பதிவில், சில மெசெஜ்களின் Screenshot-ஐ பகிர்ந்து, இப்படி யாராவது தொடர்பு கொண்டால், உடனடியாக அந்த நம்பரை Block செய்யவும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, இது போன்று நடிகைகள் ருக்மணி வசந்த், அதிதி ராவ் ஆகியோரின் பெயரிலும் Whatsapp-ல் போலியாக மெசேஜ்கள் பரவின.


