News April 15, 2024
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மரணம்

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் லோகேஷ், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. விதிஷா கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில், கடந்த 12ஆம் தேதி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். 60 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் சிக்கிய அவனை மீட்க சுமார் 40 மணி நேரத்திற்கு மேலாக மாநில பேரிடர் அவசர மீட்புப் படையினர் முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது.
Similar News
News December 1, 2025
பள்ளிகள் விடுமுறை… வந்தது அப்டேட்

பள்ளி மாணவர்களுக்கு கொத்தாக விடுமுறையுடன் டிசம்பர் மாதம் பிறந்திருக்கிறது. அரையாண்டு விடுமுறை டிச.24-ல் தொடங்குவதால், இம்மாதத்தில் தொடர்ந்து 8 நாள்கள் லீவு தான். வார விடுமுறையுடன் சேர்த்து இம்மாதம் மட்டும் 14 நாள்கள் பள்ளிகள் செயல்படாது. அதுமட்டுமின்றி, மழை காரணமாகவும் அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.
News December 1, 2025
தெளிவான முடிவை எடுத்துள்ளேன்: KAS

பாஜக சொல்லியே தவெகவில் இணைந்திருப்பதாக <<18435219>>உதயநிதி விமர்சித்ததற்கு<<>> செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். யார் சொல்லியும் இணையவில்லை, நானே தெளிவாக முடிவெடித்து தவெகவில் இணைந்திருக்கிறேன் எனக் குறிப்பிட்ட அவர், தனது பயணங்கள் சரியாகத்தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை சொல்லி அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதாகவும் அவர் சாடியுள்ளார்.
News December 1, 2025
அரையாண்டு தேர்வுக்கு தயாராகும் பள்ளிகள்

1 முதல் 5-ம் வகுப்பு வரையான அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை டிச.3-ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்கள் எமிஸ் தளத்தில் டவுன்லோடு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை பிரதி எடுத்து பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்களை பாதுகாப்பாக வைத்து, தேர்வு நடைபெறும் நாளில் பயன்படுத்த HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


