News February 14, 2025
இந்தியாவுக்கு கறுப்பு தினம்.. மறக்குமா நெஞ்சம்!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739486360999_785-normal-WIFI.webp)
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டாலும், 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாள் இந்தியாவுக்கு கருப்பு நாளாகவே அமைந்தது. 2019 பிப்.14ல் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு CRPF வீரர்களுடன் வந்த ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை கார் மோதி வெடித்து சிதறியது. இதில், 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு காரணமான பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை 12 நாட்களில் இந்தியா அழித்தது.
Similar News
News February 19, 2025
நீங்க தயிர் சாதம்… நாங்க நல்லி எலும்பு!!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737544432911_55-normal-WIFI.webp)
தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே கோபம் வரும்போது, நல்லி எலும்பு சாப்பிடும் தங்களுக்கு கோபம் வராதா என வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தமிழ் மண்ணுக்கு தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக குற்றஞ்சாட்டினார். மேலும், TN அரசு நிறைவேற்றும் தீர்மானங்களை, CG குப்பையில் வீசுவதாகவும் சாடியுள்ளார்.
News February 19, 2025
உறுதியான பற்களுக்கு டிப்ஸ்!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739896575970_958-normal-WIFI.webp)
உங்கள் பற்களை உறுதியாக வைக்கும் உணவுகள்.
*பால், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற பால் பொருட்கள்.
*கேரட், ஆப்பிள், வெள்ளரி, பீட்ரூட் போன்ற காய்கறிகள் மற்றும் பழங்கள்.
*வோக்கோசு, கீரை, வெங்காயம், வெந்தயம், செலரி போன்ற கீரைகள்.
*உலர் திராட்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, குருதிநெல்லி போன்ற பெர்ரிகள்.
*ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை போன்ற பழங்கள்
News February 19, 2025
தமிழ்.. தமிழ்.. 60 ஆண்டாக பேச மட்டுமே செய்கின்றனர்: R.N.ரவி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739917234655_958-normal-WIFI.webp)
TN அரசியல்வாதிகள், தமிழ் தமிழ் எனப் பேச மட்டுமே செய்வதாக R.N.ரவி விமர்சித்துள்ளார். 60 ஆண்டுகளாகவே தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எவ்வித சேவையையும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், பாரதியார், கம்பர், வால்மீகி போன்றோரை பற்றி பேசுகிறோம்; போற்றுகிறோமா எனக் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழின் பெருமையை பின்பற்றி நாம் பயணிக்கிறோமா என்பதும் கேள்விக்குறியே எனவும் கூறியுள்ளார்.