News June 24, 2024
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த பிச்சைக்காரர்

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள பாகிஸ்தான். பிற நாடுகளிடம் பொருளாதார உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் பிச்சைக்காரர் ஒருவர் பல கோடி வருமானம் ஈட்டியுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த ஷவுகத் என்ற அந்நபர், தனது குழந்தைகளை நாட்டின் உயர்ந்த பள்ளியில் படிக்க வைக்கிறார். பிச்சையெடுப்பதன் மூலம் நாளொன்றுக்கு ₹1,000 சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
வருவாய்த்துறையினரின் டிமாண்ட் என்ன?

நாளை <<18309481>>ஸ்ட்ரைக்கில்<<>> ஈடுபடவுள்ள வருவாய் துறையினர் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்: *SIR பணியால் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் நெருக்கடி, மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதற்கு நடவடிக்கை தேவை *மீட்டிங் என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது *SIR பணிக்கு உரிய கால அவகாசம் வேண்டும் *BLO, BLA-க்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் *பணிப்பளுவை கருத்தில் கொண்டு ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும்.
News November 17, 2025
விஜய் கட்சிக்கு இதனால் பின்னடைவா?

SIR பணிகளில் மக்களுக்கு உதவ தவெகவில் போதுமான பூத் கமிட்டி ஆட்கள் இல்லை என பேசப்படுகிறது. ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு பூத் கமிட்டி அவசியம். திமுகவும், அதிமுகவும் அந்த பேஸ்மெண்ட்டை பலமாக வைத்திருப்பதால்தான் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் இருக்கின்றன. எனவே தவெகவுக்கு இதனால் பின்னடைவு ஏற்படலாம் எனவும் கூடிய விரைவில் பூத் கமிட்டியை பலமாக கட்டமைக்க வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 17, 2025
BREAKING: நாளை ஸ்டிரைக்.. முடங்குகிறது தமிழகம்

<<18309639>>பல்வேறு கோரிக்கைகளை<<>> வலியுறுத்தி, நாளை முதல் SIR பணிகளை புறக்கணித்து, ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று மாலை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், நாளை முதல் VAO, நில அளவையர், வட்டாட்சியர்கள் என அனைத்து பிரிவினரும் ஸ்ட்ரைக்கில் ஈடுபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் TN முழுவதும் பணிகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.


