News March 27, 2025

அப்பாவின் சந்தேகத்திற்கு பலியான பிஞ்சுக் குழந்தை

image

‘கருப்பான நமக்கு எப்படி வெள்ளை நிற குழந்தை பிறந்தது’ என மனைவியை டார்ச்சர் செய்த கணவர், பெற்ற மகளையே கொலை செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்த அக்ரம் ஜாவித்தின் மனைவி, இரண்டரை ஆண்டுக்கு முன்பு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இருவரும் கருப்பாக இருந்த நிலையில், குழந்தை வெள்ளையாக இருந்துள்ளது. இதனால், மனைவியை தொடர் சித்ரவதை செய்துவந்த அவர், குழந்தையை கொன்றுவிட்டு இப்போது கம்பி எண்ணுகிறார்.

Similar News

News March 31, 2025

உப்பு தண்ணீரில் கரையும் புதிய பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

image

ஜப்பானின் RIKEN CEMSஐ சேர்ந்த விஞ்ஞானிகள், உப்புத் தண்ணீரில் கரைத்தால் கரைந்து விடும் தன்மை கொண்ட புதிய பிளாஸ்டிக்கை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். தற்போது இருப்பது போலவே வலுவான பிளாஸ்டிக்காகவே இதுவும் உள்ளது. ஆனால் உப்பு தண்ணீரில் அதை போட்டதும் இருந்த இடம் தெரியாமல் கரைந்து விடுகிறது. இதனால் இயற்கை சூழலுக்கு இந்த புதிய பிளாஸ்டிக்கால் எந்த பாதிப்பும் இருக்காது.

News March 31, 2025

CSK அணி போராடி தோல்வி

image

முதலில் பேட்டிங் செய்த RR அணியில், முன்னனி பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், நிதிஷ் ராணா 81 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 182 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய CSK, ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்ததால் நிதானமாக ஆடியது. ருதுராஜ் 63 ரன்களை விளாசினாலும், அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. இதனால் 20 ஓவர்களில் 176 ரன்கள் மட்டுமே எடுத்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

News March 31, 2025

ஈரான் மீது குண்டு வீசுவோம்.. டிரம்ப் மிரட்டல்

image

அணுஆயுதம் தொடர்பான ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடவில்லை எனில், அந்நாடு மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ளாதபட்சத்தில், அந்நாடு மீது மீண்டும் வரி விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். டிரம்ப் முதல்முறை அமெரிக்க அதிபராக இருந்தபோதுதான் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து USA விலகியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!