News May 2, 2024

ஆவின் மோர் விற்பனை 30% அதிகரிப்பு

image

தமிழகத்தில் கோடை வெயில் கடந்த சில நாள்களாக மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், ஆவின் மோர் விற்பனை 30% அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் தினமும் 30,000 பாட்டில் மோர்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு 40,000ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பாக்கெட் மோர் விற்பனை கடந்தாண்டு 10,000ஆக இருந்த நிலையில், தற்போது தினமும் 18,000ஆக உயர்ந்துள்ளது.

Similar News

News July 8, 2025

கில்லிடமிருந்து இங்கி., வீரர் கற்க வேண்டும்: வாகன்

image

தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி, இங்கி., அணிக்காக விளையாடுவதே ’அதிர்ஷ்டம்’ என விமர்சித்துள்ளார் மைக்கல் வாகன். 56 போட்டிகளில் 31 தான் கிராவ்லியின் சராசரி, சுப்மன் கில் இத்தொடருக்கு வரும்போது 35 என்ற சராசரியில் இருந்தார், தற்போது 42-ஆக உயர்ந்துள்ளது. முதலில் தற்காப்பில் கவனம் செலுத்தி, பின்னர் மோசமான பந்துகளை தாக்கினார். இதனை கிராவ்லி கில்லிடமிருந்து கற்க வேண்டுமென்றார்.

News July 8, 2025

திருப்புவனம் போல் மற்றுமொரு தாக்குதல் நடத்திய போலீஸ்

image

திருப்புவனம் அஜித் மீது போலீஸ் தாக்குதல் சம்பவம் இன்னும் தணியாத நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. கோவில் இடத்தில் வீடு கட்டுவதற்கு பொன்ராஜ் என்பவர் ஈடுபட்டுள்ளார். இதனை தங்கபாண்டி என்பவர் எதிர்த்துள்ளார். விவகாரம் காவல் நிலையம் சென்றதால், வேடசந்தூர் போலீசார் தங்கப்பாண்டி வீட்டிற்கே சென்று அவருடைய மனைவி, மகனை கடுமையாக தாக்கியுள்ளார்கள்.

News July 8, 2025

அம்பேத்கர் பொன்மொழிகள்

image

*நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை. * ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின். *சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.

error: Content is protected !!